சென்னை: அரபிக் கடலில் தேஜ் புயல் உருவாகி தற்போது ஏமன் நாட்டைக் கடந்துள்ள நிலையில், வங்கக் கடலில் அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ளது ஹாமூன். இந்தப் புயலானது வங்கதேசத்தில் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
புயலைத் தொடர்ந்து சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 2ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஹாமூன் புயல் அதி தீவிர புயலாக உருமாறியுள்ளது. புயலைத் தொடர்ந்து சென்னை, கடலூர், நாகை, எண்ணூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. ஒடிசாவிற்கு கிழக்கு, தென்கிழக்கில் 210 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள புயல் நாளை நண்பகலில் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கதேசத்தின் சிட்டகாங் அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் அதிகளவிலான மழைப்பொழிவை ஏற்படுத்தும் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தற்போது தொடங்கி உள்ளது. ஹாமூன் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ள கடற்கரை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. மேலும் பலத்த சூறவாளி காற்றும் வீசிவருவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் வலுப்பெற்று வருவதை முன்னிட்டு 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}