- மஞ்சுளா தேவி
சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியுள்ளது. அந்தப் புயலுக்கு மிதிலி என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் பரவலாக கன மழை பெய்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் முறையாக ஒரு புயல் வங்கக் கடலில் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு மாலத்தீவு பரிந்துரைத்த மிதிலி என பெயரிடப்பட்டது.
மிதிலி புயல் விசாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு- தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்து நாளை அதாவது 18ஆம் தேதி வங்கதேசம் அருகே கரையை கடக்கும். அப்போது மணிக்கு 60 முதல் 70 வரை சூரைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதிலி புயல் காரணமாக,தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் இன்று பரவலாக கன மழை பெய்யக்கூடும். குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ,குமரி நெல்லை ,தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}