- மஞ்சுளா தேவி
சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியுள்ளது. அந்தப் புயலுக்கு மிதிலி என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் பரவலாக கன மழை பெய்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் முறையாக ஒரு புயல் வங்கக் கடலில் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு மாலத்தீவு பரிந்துரைத்த மிதிலி என பெயரிடப்பட்டது.
மிதிலி புயல் விசாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு- தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்து நாளை அதாவது 18ஆம் தேதி வங்கதேசம் அருகே கரையை கடக்கும். அப்போது மணிக்கு 60 முதல் 70 வரை சூரைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதிலி புயல் காரணமாக,தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் இன்று பரவலாக கன மழை பெய்யக்கூடும். குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ,குமரி நெல்லை ,தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}