வங்கக் கடலில் உருவானது "மிதிலி " புயல்.. அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு மழை உண்டு!

Nov 17, 2023,06:49 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியுள்ளது. அந்தப் புயலுக்கு மிதிலி என்று பெயரிடப்பட்டுள்ளது.


கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் பரவலாக கன மழை பெய்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் முறையாக ஒரு புயல் வங்கக் கடலில் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு மாலத்தீவு பரிந்துரைத்த மிதிலி என பெயரிடப்பட்டது.


மிதிலி புயல் விசாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு- தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்து நாளை அதாவது 18ஆம் தேதி வங்கதேசம் அருகே கரையை கடக்கும். அப்போது மணிக்கு 60 முதல் 70 வரை சூரைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




மிதிலி புயல் காரணமாக,தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.


இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்:


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில்  இன்று பரவலாக கன மழை பெய்யக்கூடும். குறிப்பாக  ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ,குமரி நெல்லை ,தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.


சென்னையை பொருத்தவரை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு

news

மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி

news

தாடி பாலாஜி.. Nooo.. இனி பொதுச் செயலாளர் பாலாஜி.. புதுச்சேரியில் அடித்த லக்கி பிரைஸ்!

news

தமிழகத்தில் நாளை மிதமான மழை செய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

அம்மா ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது மோடி இருக்கிறார்: டிடிவி தினகரன் பேட்டி!

news

தவெக தலைவர் வாயில் வடை சுடுகிறார்.. இவருக்கு என்ன அவ்வளவு பெரிய கூட்டமா?-செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

பனையூர் பண்ணையார் அவர்களே.. விஜய்யை நோக்கி அதிரடியாக திரும்பிய அதிமுக..!

news

ஊழலும் இல்லை, தீய சக்தியும் இல்லை; அதனால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை - நயினார் நாகேந்திரன்

news

77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி

அதிகம் பார்க்கும் செய்திகள்