- மஞ்சுளா தேவி
சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியுள்ளது. அந்தப் புயலுக்கு மிதிலி என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் பரவலாக கன மழை பெய்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் முறையாக ஒரு புயல் வங்கக் கடலில் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு மாலத்தீவு பரிந்துரைத்த மிதிலி என பெயரிடப்பட்டது.
மிதிலி புயல் விசாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு- தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்து நாளை அதாவது 18ஆம் தேதி வங்கதேசம் அருகே கரையை கடக்கும். அப்போது மணிக்கு 60 முதல் 70 வரை சூரைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதிலி புயல் காரணமாக,தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் இன்று பரவலாக கன மழை பெய்யக்கூடும். குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ,குமரி நெல்லை ,தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}