வங்கக் கடலில் புயல் உருவாகப் போகிறது.. ஆனால் நம்மிடம் வராது.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

May 19, 2024,09:50 AM IST

சென்னை: வங்கக் கடலில் மே 22ம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது தொடர்ந்து வலுப் பெற்று புயலாக மாறக் கூடும். ஆனால் அது நம்மிடமிருந்து தொலை தூரத்திற்குப் போய் விடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.


தென் மேற்குப் பருவ மழை தொடங்கவுள்ளது. இந்த நிலையில் அதற்கான முஸ்தீபுகளில் இயற்கை இறங்கி விட்டது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் தற்போது மேலடுக்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனால் மழை கிடைத்து வருகிறது.


இந்த வளிமண்டல சுழற்சியானது வங்கக் கடலில் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மே 22ம் தேதி மாறவுள்ளது. அதைத் தொடர்ந்து இது காற்றழுத்த மண்டலமாக 24ம் தேதி வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தற்போது ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.



அவர் கூறுகையில், காற்றழுத்த மண்டலமானது  மேலும் வலுப்பெற்று புயலாக மாறும். ஆனால் அது புயலாக மாறும்போது தமிழ்நாட்டை விட்டு வெகு தொலைவு போயிருக்கும். நம்மிடம் புயல் வராது. அதேசமயம், கன்னியாகுமரி மாவட்டத்தில் கவனம் வைக்க வேண்டும்.  தற்போதைய நிலையில் கன்னியாகுமரி, தென் கேரளாவில் நிறைய மழைக்கு வாய்ப்புள்ளது.


அதேபோல சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

news

செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!

news

Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!

news

பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?

news

கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக

news

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்

news

மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்