சென்னை: வங்கக் கடலில் மே 22ம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது தொடர்ந்து வலுப் பெற்று புயலாக மாறக் கூடும். ஆனால் அது நம்மிடமிருந்து தொலை தூரத்திற்குப் போய் விடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தென் மேற்குப் பருவ மழை தொடங்கவுள்ளது. இந்த நிலையில் அதற்கான முஸ்தீபுகளில் இயற்கை இறங்கி விட்டது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் தற்போது மேலடுக்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனால் மழை கிடைத்து வருகிறது.
இந்த வளிமண்டல சுழற்சியானது வங்கக் கடலில் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மே 22ம் தேதி மாறவுள்ளது. அதைத் தொடர்ந்து இது காற்றழுத்த மண்டலமாக 24ம் தேதி வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தற்போது ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
அவர் கூறுகையில், காற்றழுத்த மண்டலமானது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும். ஆனால் அது புயலாக மாறும்போது தமிழ்நாட்டை விட்டு வெகு தொலைவு போயிருக்கும். நம்மிடம் புயல் வராது. அதேசமயம், கன்னியாகுமரி மாவட்டத்தில் கவனம் வைக்க வேண்டும். தற்போதைய நிலையில் கன்னியாகுமரி, தென் கேரளாவில் நிறைய மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}