வங்கக் கடலில் புயல் உருவாகப் போகிறது.. ஆனால் நம்மிடம் வராது.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

May 19, 2024,09:50 AM IST

சென்னை: வங்கக் கடலில் மே 22ம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது தொடர்ந்து வலுப் பெற்று புயலாக மாறக் கூடும். ஆனால் அது நம்மிடமிருந்து தொலை தூரத்திற்குப் போய் விடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.


தென் மேற்குப் பருவ மழை தொடங்கவுள்ளது. இந்த நிலையில் அதற்கான முஸ்தீபுகளில் இயற்கை இறங்கி விட்டது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் தற்போது மேலடுக்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனால் மழை கிடைத்து வருகிறது.


இந்த வளிமண்டல சுழற்சியானது வங்கக் கடலில் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மே 22ம் தேதி மாறவுள்ளது. அதைத் தொடர்ந்து இது காற்றழுத்த மண்டலமாக 24ம் தேதி வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தற்போது ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.



அவர் கூறுகையில், காற்றழுத்த மண்டலமானது  மேலும் வலுப்பெற்று புயலாக மாறும். ஆனால் அது புயலாக மாறும்போது தமிழ்நாட்டை விட்டு வெகு தொலைவு போயிருக்கும். நம்மிடம் புயல் வராது. அதேசமயம், கன்னியாகுமரி மாவட்டத்தில் கவனம் வைக்க வேண்டும்.  தற்போதைய நிலையில் கன்னியாகுமரி, தென் கேரளாவில் நிறைய மழைக்கு வாய்ப்புள்ளது.


அதேபோல சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்