டெல்லி: மறைந்த முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகளும், வழக்கறிஞருமான பன்சூரி சுவராஜ், லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். முதல் முறையாக அவர் தேர்தல் களம் காண்கிறார்.
தனது தாயாரைப் போலவே புது டெல்லி தொகுதியில் அவர் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். இன்று அறிவிக்கப்பட்ட பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலிலேயே பன்சூரி சுவராஜின் பெயரும் இடம் பெற்றிருப்பதால் அவரது தரப்பு மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த 15 வருடமாக வழக்கறிஞராக இருந்து வருகிறார் பன்சூரி சுவராஜ். கடந்த ஆண்டுதான் இவரை பாஜகவின் டெல்லி சட்டப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளராக பாஜக மேலிடம் நியமித்தது. வார்விக் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்தவரான பன்சூரி சுவராஜ், லண்டனில் சட்டம் பயின்றவர். ஆக்ஸ்போர்டில் உள்ள கல்லூரியில் சட்ட மேற்படிப்பையும் முடித்தவர் பன்சூரி சுவராஜ்.
பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜரானவர் பன்சூரி சுவராஜ். குறிப்பாக முன்னாள் ஐபிஎல் நிர்வாகி லலித் மோடி வழக்கில் அவருக்காக டெல்லி ஹைகோர்ட்டில் ஆஜராகி வாதிட்ட சட்டக் குழுவில் பன்சூரி சுவராஜும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2012ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2014 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் பன்சூரி சுவராஜ், லலித் மோடிக்காக ஆஜரானார். அப்போது இது சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் புதிய தலைமுறையாக உருவாகும் தலைவர்களில் பன்சூரிக்கும் முக்கிய இடம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. அவரது தாயாருக்கு கிடைத்த அங்கீகாரத்தைப் போல, பன்சூரிக்கும், அமைச்சரவையில் பாஜக இடம் தருமா என்ற எதிர்பார்ப்பும் பலமாக உள்ளது.
"பன்சூரி" என்றால் புல்லாங்குழல் என்று பொருளாகும்.. பாஜகவின் புதிய பூபாளமாக பன்சூரி சுவராஜ் உருவெடுப்பாரா.. பொறுத்திருந்து பார்ப்போம்.
உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்
ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு
முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!
'காக்ரோச் ஜனதா கட்சி'யின் எக்ஸ்தள பக்க முடக்கத்தை நீக்க கோர்ட் அதிரடி உத்தரவு!
ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!
எங்கள் கேப்டன் கூல்...தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்
சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுத் தாக்கல்!
கேரளா வயநாட்டில் நிலச்சரிவு: சுரங்கப்பாதை பணி நடக்கும் இடத்தில் பயங்கரம்
குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ
{{comments.comment}}