பரீட்சைக்கு நேரமாச்சு.. ஆனாலும் டென்ஷன் வேண்டாம் ஸ்டூடன்ட்ஸ்.. கூலாக தேர்வெழுத்த ஜில் ஜில் டிப்ஸ்!

Feb 26, 2025,05:05 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இது பரீட்சை சீசன்.. அதாவது முழு ஆண்டுத் தேர்வுகள் நெருங்கி விட்டன. ஒரு வருட உழைப்பை பரீட்சித்துப் பார்க்கும் நேரம் இது. அதிலும் 10 மற்றும் 12வது வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்தான் ரொம்பவே டென்ஷனாக இருப்பார்கள். 


டென்ஷன் இருக்கும்தான்.. ஆனாலும் பயப்படாமல், ரிலாக்ஸ்டாக தேர்வுக்குத் தயாராகுங்கள். நிச்சயம் நன்றாகவே தயாராகியிருப்பீர்கள்.. நன்றாகவும் பரீட்சையை எழுதி முடிப்பீர்கள்.. நம்பிக்கையோடு ரெடியாகுங்க.. உங்களுக்காக கொஞ்சம் டிப்ஸ்.




திட்டமிடுதல்: பரீட்சைக்குப் படிக்க வேண்டிய பாடங்களை, ஒரு மாதிரி (Model) டைம் டேபிளை உருவாக்குங்கள். ஒவ்வொரு நாளும்  எந்த பாடங்களை படிக்க வேண்டுமென திட்டமிடுங்கள்.


பயிற்சி: கடந்த ஆண்டு கேள்விப் பேப்பர்களை, மாதிரி கேள்வி தொகுப்புகளை படிக்கவும். இது உங்களுக்கு தேர்வு கேள்விகள் எப்படி வரும் என்ற ஒரு ஐடியா கிடைக்கும். தயாராவதற்கு எளிதாக இருக்கும்.


மன அழுத்தம் வேண்டாம்: மன அழுத்தம் இல்லாமல் படிக்கவும். மனதில் எந்த பதட்டத்தையும் வச்சுக்காதீங்க. அது முக்கியம். ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து படிக்காதீங்க. அவ்வப்போது குட்டி குட்டி பிரேக் எடுங்க. இது ரிலாக்ஸ்டாக உங்களை வச்சுக்க உதவும்.


குறிப்பெடுங்கள்: முக்கியமான புள்ளி விவரங்களை குறித்துக்கொள்ளுங்கள். பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்புகளை தயாரிக்கவும். இது எளிதாக படிக்க உதவும். மனப்பாடம் செய்வதை விட இது எளிதாக மனதில் பதியும்.


சிறிய இலக்குகள்: பெரிய தலைப்புகளைச் சிறு பகுதிகளாகப் பிரித்து படிக்கவும். இதன் மூலம் பெரிய போர்ஷனை படிக்கணுமே என்ற பயம் போகும்.


குரூப் டிஸ்கஷன்: சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் அவ்வப்போது பேசுங்கள். அவர்களிடம் கஷ்டமான போர்ஷன் குறித்து டிஸ்கஸ் செய்யலாம். குரூப் டிஸ்கஷனும் கூட உதவும். 


ரிவிஷன்: படித்ததைப் பல முறை  ரிவிஷன் விட்டபடி இருங்க. இது எந்த வகையிலும் நீங்கள் படித்தது மறந்து போகாமல் இருக்க உதவும்.


ரிலாக்ஸ் நேரம்: உங்கள் உடல் மற்றும் மனதுக்கு அவ்வப்போது ஓய்வு அளியுங்கள். அந்த இடைவெளியில் குட்டி தூக்கம் அல்லது பாட்டுப் பாடுவது, கேட்பது, டான்ஸ் ஆடுவது,  வெளியில் சற்று இளைப்பாறுவது என்று ரிலாக்ஸாக இருக்க முயங்சியுங்கள். 


இறுதித் தேர்வு என்பது அத்தோடு எதுவும் முடியப் போவதில்லை. எனவே எதையும் நினைத்துப் பயப்படாமல், அதேசமயம் சற்று அக்கறை எடுத்துப் படித்தாலே போதும், நிச்சயம் நீங்கள் உங்களது இறுதித் தேர்வை சிறப்பாக எழுத முடியும். ஸோ, கவலைப்படாமல், பதட்டப்படாமல், பயப்படாமல் ஜாலியா படிங்க, ஜம்முன்னு தேர்வெழுதுங்க.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வீழ்வது முடிவா.. அட அதுதாங்க ஆரம்பமே.. Falling is not the end!

news

கனவு .. யதார்த்தம்.. ஒரு அழகிய அனுபவம்.. A fantasy with a mermaid

news

ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை

news

தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?

news

பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி

news

Bollywood is Back: பாலிவுட்டின் பிரம்மாண்ட எழுச்சி.. வசூல் வேட்டையில் பார்டர் 2 மற்றும் துரந்தர்!

news

மகாராஷ்டிரா துணை முதல்வராக சுனேத்ரா பவார் இன்று மாலை பதவியேற்பு

news

மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?

news

வலி இல்லாமல் வழி பிறக்காது.. Protect Yourself From Your Thoughts

அதிகம் பார்க்கும் செய்திகள்