சென்னை: தமிழ்நாடு முழுவதும் இது பரீட்சை சீசன்.. அதாவது முழு ஆண்டுத் தேர்வுகள் நெருங்கி விட்டன. ஒரு வருட உழைப்பை பரீட்சித்துப் பார்க்கும் நேரம் இது. அதிலும் 10 மற்றும் 12வது வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்தான் ரொம்பவே டென்ஷனாக இருப்பார்கள்.
டென்ஷன் இருக்கும்தான்.. ஆனாலும் பயப்படாமல், ரிலாக்ஸ்டாக தேர்வுக்குத் தயாராகுங்கள். நிச்சயம் நன்றாகவே தயாராகியிருப்பீர்கள்.. நன்றாகவும் பரீட்சையை எழுதி முடிப்பீர்கள்.. நம்பிக்கையோடு ரெடியாகுங்க.. உங்களுக்காக கொஞ்சம் டிப்ஸ்.

திட்டமிடுதல்: பரீட்சைக்குப் படிக்க வேண்டிய பாடங்களை, ஒரு மாதிரி (Model) டைம் டேபிளை உருவாக்குங்கள். ஒவ்வொரு நாளும் எந்த பாடங்களை படிக்க வேண்டுமென திட்டமிடுங்கள்.
பயிற்சி: கடந்த ஆண்டு கேள்விப் பேப்பர்களை, மாதிரி கேள்வி தொகுப்புகளை படிக்கவும். இது உங்களுக்கு தேர்வு கேள்விகள் எப்படி வரும் என்ற ஒரு ஐடியா கிடைக்கும். தயாராவதற்கு எளிதாக இருக்கும்.
மன அழுத்தம் வேண்டாம்: மன அழுத்தம் இல்லாமல் படிக்கவும். மனதில் எந்த பதட்டத்தையும் வச்சுக்காதீங்க. அது முக்கியம். ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து படிக்காதீங்க. அவ்வப்போது குட்டி குட்டி பிரேக் எடுங்க. இது ரிலாக்ஸ்டாக உங்களை வச்சுக்க உதவும்.
குறிப்பெடுங்கள்: முக்கியமான புள்ளி விவரங்களை குறித்துக்கொள்ளுங்கள். பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்புகளை தயாரிக்கவும். இது எளிதாக படிக்க உதவும். மனப்பாடம் செய்வதை விட இது எளிதாக மனதில் பதியும்.
சிறிய இலக்குகள்: பெரிய தலைப்புகளைச் சிறு பகுதிகளாகப் பிரித்து படிக்கவும். இதன் மூலம் பெரிய போர்ஷனை படிக்கணுமே என்ற பயம் போகும்.
குரூப் டிஸ்கஷன்: சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் அவ்வப்போது பேசுங்கள். அவர்களிடம் கஷ்டமான போர்ஷன் குறித்து டிஸ்கஸ் செய்யலாம். குரூப் டிஸ்கஷனும் கூட உதவும்.
ரிவிஷன்: படித்ததைப் பல முறை ரிவிஷன் விட்டபடி இருங்க. இது எந்த வகையிலும் நீங்கள் படித்தது மறந்து போகாமல் இருக்க உதவும்.
ரிலாக்ஸ் நேரம்: உங்கள் உடல் மற்றும் மனதுக்கு அவ்வப்போது ஓய்வு அளியுங்கள். அந்த இடைவெளியில் குட்டி தூக்கம் அல்லது பாட்டுப் பாடுவது, கேட்பது, டான்ஸ் ஆடுவது, வெளியில் சற்று இளைப்பாறுவது என்று ரிலாக்ஸாக இருக்க முயங்சியுங்கள்.
இறுதித் தேர்வு என்பது அத்தோடு எதுவும் முடியப் போவதில்லை. எனவே எதையும் நினைத்துப் பயப்படாமல், அதேசமயம் சற்று அக்கறை எடுத்துப் படித்தாலே போதும், நிச்சயம் நீங்கள் உங்களது இறுதித் தேர்வை சிறப்பாக எழுத முடியும். ஸோ, கவலைப்படாமல், பதட்டப்படாமல், பயப்படாமல் ஜாலியா படிங்க, ஜம்முன்னு தேர்வெழுதுங்க.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!
முன்னாள் புயல் டிட்வா.. இன்னும் சில நாட்கள் கடலோரமாகவே சுத்திருட்டிருக்குமாம்.. மழை நீடிக்கும்!
டெல்டா மாவட்டங்களை உலுக்கிய டிட்வா புயல். கனமழையால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
அரசியல் சாசனத்தின் மீது ஆணையாக.. வித்தியாசமான உறுதிமொழி எடுத்து திருமணம்!
நடிகை சமந்தா ரகசிய திருமணம்...இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
திமுக ஆட்சியில் கொலை, கொள்ளைக்கு பஞ்சமே இல்லை... உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை: அன்புமணி
கிளைமேட்டே மாறிப் போச்சு.. ஓவரா வேற குளிருது.. சூடா கற்பூரவல்லி இஞ்சி டீ குடிப்போமா?
சுயநலவாதி...துரோகி...கோபியில் செங்கோட்டையனை சரமாரியாக விமர்சித்த இபிஎஸ்
குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது...எதிர்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்
{{comments.comment}}