பரீட்சைக்கு நேரமாச்சு.. ஆனாலும் டென்ஷன் வேண்டாம் ஸ்டூடன்ட்ஸ்.. கூலாக தேர்வெழுத்த ஜில் ஜில் டிப்ஸ்!

Feb 26, 2025,05:05 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இது பரீட்சை சீசன்.. அதாவது முழு ஆண்டுத் தேர்வுகள் நெருங்கி விட்டன. ஒரு வருட உழைப்பை பரீட்சித்துப் பார்க்கும் நேரம் இது. அதிலும் 10 மற்றும் 12வது வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்தான் ரொம்பவே டென்ஷனாக இருப்பார்கள். 


டென்ஷன் இருக்கும்தான்.. ஆனாலும் பயப்படாமல், ரிலாக்ஸ்டாக தேர்வுக்குத் தயாராகுங்கள். நிச்சயம் நன்றாகவே தயாராகியிருப்பீர்கள்.. நன்றாகவும் பரீட்சையை எழுதி முடிப்பீர்கள்.. நம்பிக்கையோடு ரெடியாகுங்க.. உங்களுக்காக கொஞ்சம் டிப்ஸ்.




திட்டமிடுதல்: பரீட்சைக்குப் படிக்க வேண்டிய பாடங்களை, ஒரு மாதிரி (Model) டைம் டேபிளை உருவாக்குங்கள். ஒவ்வொரு நாளும்  எந்த பாடங்களை படிக்க வேண்டுமென திட்டமிடுங்கள்.


பயிற்சி: கடந்த ஆண்டு கேள்விப் பேப்பர்களை, மாதிரி கேள்வி தொகுப்புகளை படிக்கவும். இது உங்களுக்கு தேர்வு கேள்விகள் எப்படி வரும் என்ற ஒரு ஐடியா கிடைக்கும். தயாராவதற்கு எளிதாக இருக்கும்.


மன அழுத்தம் வேண்டாம்: மன அழுத்தம் இல்லாமல் படிக்கவும். மனதில் எந்த பதட்டத்தையும் வச்சுக்காதீங்க. அது முக்கியம். ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து படிக்காதீங்க. அவ்வப்போது குட்டி குட்டி பிரேக் எடுங்க. இது ரிலாக்ஸ்டாக உங்களை வச்சுக்க உதவும்.


குறிப்பெடுங்கள்: முக்கியமான புள்ளி விவரங்களை குறித்துக்கொள்ளுங்கள். பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்புகளை தயாரிக்கவும். இது எளிதாக படிக்க உதவும். மனப்பாடம் செய்வதை விட இது எளிதாக மனதில் பதியும்.


சிறிய இலக்குகள்: பெரிய தலைப்புகளைச் சிறு பகுதிகளாகப் பிரித்து படிக்கவும். இதன் மூலம் பெரிய போர்ஷனை படிக்கணுமே என்ற பயம் போகும்.


குரூப் டிஸ்கஷன்: சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் அவ்வப்போது பேசுங்கள். அவர்களிடம் கஷ்டமான போர்ஷன் குறித்து டிஸ்கஸ் செய்யலாம். குரூப் டிஸ்கஷனும் கூட உதவும். 


ரிவிஷன்: படித்ததைப் பல முறை  ரிவிஷன் விட்டபடி இருங்க. இது எந்த வகையிலும் நீங்கள் படித்தது மறந்து போகாமல் இருக்க உதவும்.


ரிலாக்ஸ் நேரம்: உங்கள் உடல் மற்றும் மனதுக்கு அவ்வப்போது ஓய்வு அளியுங்கள். அந்த இடைவெளியில் குட்டி தூக்கம் அல்லது பாட்டுப் பாடுவது, கேட்பது, டான்ஸ் ஆடுவது,  வெளியில் சற்று இளைப்பாறுவது என்று ரிலாக்ஸாக இருக்க முயங்சியுங்கள். 


இறுதித் தேர்வு என்பது அத்தோடு எதுவும் முடியப் போவதில்லை. எனவே எதையும் நினைத்துப் பயப்படாமல், அதேசமயம் சற்று அக்கறை எடுத்துப் படித்தாலே போதும், நிச்சயம் நீங்கள் உங்களது இறுதித் தேர்வை சிறப்பாக எழுத முடியும். ஸோ, கவலைப்படாமல், பதட்டப்படாமல், பயப்படாமல் ஜாலியா படிங்க, ஜம்முன்னு தேர்வெழுதுங்க.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

news

இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்