டெல்லி: டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலர் உயிரிழந்த சம்பவம் மனதை உலுக்குவதாக உள்ளது என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே இன்று மாலை நடந்த கார் வெடிப்புச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில், டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் குண்டு வெடித்த செய்தி மிகவும் மனதை உலுக்குவதாகவும் கவலை அளிப்பதாகவும் உள்ளது. இந்த துயர சம்பவத்தில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்ததாக வரும் தகவல் மிகுந்த வேதனை அளிக்கிறது.

இந்த துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த துயரமடைந்த குடும்பங்களுடன் நான் துணை நிற்கிறேன், எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்தது மற்றும் பலர் காயமடைந்தது குறித்த செய்தி மிகவும் மனதை உலுக்குவதாக உள்ளது.
இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்..
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}