டெல்லி: டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலர் உயிரிழந்த சம்பவம் மனதை உலுக்குவதாக உள்ளது என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே இன்று மாலை நடந்த கார் வெடிப்புச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில், டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் குண்டு வெடித்த செய்தி மிகவும் மனதை உலுக்குவதாகவும் கவலை அளிப்பதாகவும் உள்ளது. இந்த துயர சம்பவத்தில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்ததாக வரும் தகவல் மிகுந்த வேதனை அளிக்கிறது.

இந்த துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த துயரமடைந்த குடும்பங்களுடன் நான் துணை நிற்கிறேன், எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்தது மற்றும் பலர் காயமடைந்தது குறித்த செய்தி மிகவும் மனதை உலுக்குவதாக உள்ளது.
இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்..
61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா.. உலகக் கோப்பை போட்டிகளில் 16வது வெற்றி
பாகிஸ்தான் பந்து வீச்சை வச்சு செய்த இஷான் கிஷன் அவுட்.. ஆனாலும் இந்தியா ஸ்டிராங்!
நவி மும்பை தமிழ் சங்க பொன்விழா.. விஜய் டிவி ஸ்டார்களின் இசை மழையில் நனைந்த ரசிகர்கள்!
சிவமே சிவமே அருள்வாய் சிவமே....!
அனல் பறக்கப் போகும் இந்தியா vs பாகிஸ்தான் மோதல்.. கொழும்பு டி20 போட்டியில் மழை குறுக்கிடுமா?
அற்புதங்கள் நிறைந்த .. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மலைப்பயணம்!
Maha Shivaratri 2026.. இருள் நீங்கும் நேரம்.. மகா சிவராத்திரி!
சிவராத்திரி திருவருள் நாயகனே..... சிங்கார வேலனின் தந்தையே....!
கூட்டணி ஆட்சி பற்றி இனி யாரும் கேட்க மாட்டார்கள்...என்ன ஆர்.எஸ்.பாரதி இப்படி சொல்லிட்டார்?
{{comments.comment}}