டெல்லி கார் குண்டு வெடிப்பு... காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் பிரதமர் மோடி!

Nov 12, 2025,05:27 PM IST

டெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்.


டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் வெடித்த சம்பவத்தில் 12 பேர் பலியாகினர். பலர் பலத்த காயமடைந்தனர். மேலும், வெடிகுண்டு வெடித்து சிதறியதில், அருகில் இருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இந்த சம்பவம் குறித்து புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. 




இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த காரை ஓட்டி வந்தது ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமது உமர் என கண்டறியப்பட்டது. முகமது உமருடன் தொடர்பில் இருந்ததாக பெண் மருத்துவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில். அரசுமுறை பயணமாக 2 நாட்கள் பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி, பயணத்தை நிறைவு செய்து கொண்டு இன்று டெல்லி திரும்பினார். அவர் நேராக டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனைக்குச் சென்று, அங்கு குண்டுவெடிப்பில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!

news

திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

news

ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!

news

சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)

news

ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)

news

கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க

news

வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!

news

தாயன்பு !

news

All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்