தமிழகத்தின் புதிய டிஜிபி யார்.. டெல்லி யுபிஎஸ்சி இன்று ஆலேசானை!

Sep 26, 2025,02:54 PM IST

சென்னை: தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி யார் என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.


தமிழக காவல்துறையின் டிஜிபியாக இருந்த சங்கர் ஜூவாலின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய டிஜிபியைத் தேர்வு செய்து மூன்று மாதங்களுக்கு முன்பாக மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு அனுப்பியிருக்க வேண்டும். 


ஆனால், முறைப்படி அதனைக் கடைப்பிடிக்காமல், கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தான் அதற்கான பட்டியல் அனுப்பப்பட்டது. அதே சமயம், சங்கர் ஜூவால் ஓய்வு பெற்றதால், பொறுப்பு டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரியான வெங்கட்ராமனை  முதல்வர் ஸ்டாலின் நியமித்தார். இந்த நியமனம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக இருப்பதாக சர்ச்சைகள் கிளம்பின.




இந்தநிலையில், தமிழ்நாடு டிஜிபி நியமனம் குறித்து டெல்லியில் யுபிஎஸ்சி இன்று ஆலோசனை செய்து வருவதாகவும், இந்த ஆலோசனையின் போது தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் என்.முருகானந்தன், உள்துறைச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்று இருப்பதாகவும் தெரிகிறது.


தமிழ்நாட்டின் புதிய டிஜிபி பதவிக்கு தகுதியான 3 பேரை யுபிஎஸ்சி இன்று இறுதி செய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இறுதி செய்யப்படும் 3 பேரில் ஒருவரை தமிழ்நாடு டிஜிபியாக தமிழ்நாடு அரசு நியமிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா.. உலகக் கோப்பை போட்டிகளில் 16வது வெற்றி

news

பாகிஸ்தான் பந்து வீச்சை வச்சு செய்த இஷான் கிஷன் அவுட்.. ஆனாலும் இந்தியா ஸ்டிராங்!

news

நவி மும்பை தமிழ் சங்க பொன்விழா.. விஜய் டிவி ஸ்டார்களின் இசை மழையில் நனைந்த ரசிகர்கள்!

news

சிவமே சிவமே அருள்வாய் சிவமே....!

news

அனல் பறக்கப் போகும் இந்தியா vs பாகிஸ்தான் மோதல்.. கொழும்பு டி20 போட்டியில் மழை குறுக்கிடுமா?

news

அற்புதங்கள் நிறைந்த .. சதுரகிரி சுந்தர மகாலிங்கம்‌ கோவில் மலைப்பயணம்!

news

Maha Shivaratri 2026.. இருள் நீங்கும் நேரம்.. மகா சிவராத்திரி!

news

சிவராத்திரி திருவருள் நாயகனே..... சிங்கார வேலனின் தந்தையே....!

news

கூட்டணி ஆட்சி பற்றி இனி யாரும் கேட்க மாட்டார்கள்...என்ன ஆர்.எஸ்.பாரதி இப்படி சொல்லிட்டார்?

அதிகம் பார்க்கும் செய்திகள்