டெல்லி: செலவினங்களை குறைக்கும் நோக்கில் உலகம் முழுவதிலும் சுமார் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அந்நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
கணினி உலகில் பல முக்கிய நிறுவனங்களுள் ஒன்றாக டெல் நிறுவனம் இருந்து வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு தகவல் தொழில்புட்ப நிறுவனம் இது. கணினி மற்றும் அது சார்ந்த உற்பத்தி , விற்பனை மற்றும் சேவைகளை செய்து வருகிறது. உலகளவில் இந்நிறுவனத்தில் 1,03,300 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில் மட்டும் டெல் நிறுவனத்தில் சுமார் 27,000 ஊழியர்கள் பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல் நிறுவனம் இதற்கு முன்பு பல பொருளாதார சூழ்நிலைகளை எதிர்கொண்டு சரிவில் இருந்து மீண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இந்நிறுவனம் 6650 ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து டெல் நிறுவனத்தின் கணினிகள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களின் விற்பனை தொடர்ந்து சரிந்து வருவதால் இந்தாண்டும் ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல் நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய அறிக்கையில், நாங்கள் இதற்கு முன்னர் பொருளாதார வீழ்ச்சிகளை எதிர்கொண்டுள்ளோம். அதிலிருந்து வலுவான முறையில் மீண்டு வந்துள்ளோம். இப்போதும் நாங்கள் நிச்சயம் போராடி மீண்டு வருவோம் என்று தெரிவித்துள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}