சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலில் திமுகவின் எதிரி யார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சற்றும் யோசிக்காமல் சொன்ன பதிலால் பரபரப்பு கூடியது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு ஆய்வுப் பணிகளில் காலையில் ஈடுபட்டார். அதன் பின்னர் சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்.
செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர் ஒருவர், வருகிற 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுகவின் எதிரி யார் என்று கேட்டார். அதற்கு சற்றும் யோசிக்காத உதயநிதி ஸ்டாலின், தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் இருக்குங்க என்று சட்டென்று கூறி விட்டு கிளம்பினார்.
வரும் சட்டசபைத் தேர்தல் களத்தில் திமுகவுக்கு தவெக கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தவெக தலைமையில் கூட்டணி அமையவிருப்பதாகவும், அதில் யாரெல்லாம் இடம் பெறக் கூடும் என்ற பரபரப்பான பேச்சும் அடிபடுகிறது. மேலும் விஜய்யும் கூட, திமுகவை தனது கொள்கை எதிரி என்று அறிவித்து சூட்டைக் கிளப்பி விட்டுள்ளார். இதுதொடர்பான விவாதங்கள் இன்னும் கூட முடியவில்லை.
விஜய்யின் வருகை, அவரது கட்சிக்கு கூடி வரும் இளைஞர் பட்டாளத்தின் ஆதரவு ஆகியவற்றை திமுகவும் கவனிக்காமல் இல்லை. அதற்கேற்ப அது தனது பணிகளையும் முடுக்கி விட்டு வருகிறது. விஜய்யின் வருகையை ஊகித்துதான் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினும் விடாமல் தொடர்ந்து சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். கிடைக்கும் கேப்பில் எல்லாம் எதிராளிகளுக்கு அதிரடியாக பதில் கொடுத்து வருகிறார். இந்த நிலையில்தான் திமுகவின் எதிரி யார் என்ற கேளவிக்கு இப்படி ஒரு பதிலை அளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
25, 26 தேதிகளில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.. இந்திய வானிலை ஆய்வு மையம்..!
இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும்.. அடுத்த 10 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்..!
பொதுவெளிகளில் அறிக்கை வெளியிட.. நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்திக்கு ஹைகோர்ட் தடை
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய நிபந்தனைகளை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
கோடை விடுமுறைக்கு பின்னர்... திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறப்பு!
அரபிக் கடலில்.. வலுப்பெற்றது.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் தகவல்!
வங்கதேசத்தில் மீண்டும் அரசியல் குழப்பம்...பதவி விலகுகிறார் முகமது யூனுஸ்
2026 இல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள்: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை!
{{comments.comment}}