சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலில் திமுகவின் எதிரி யார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சற்றும் யோசிக்காமல் சொன்ன பதிலால் பரபரப்பு கூடியது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு ஆய்வுப் பணிகளில் காலையில் ஈடுபட்டார். அதன் பின்னர் சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்.
செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர் ஒருவர், வருகிற 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுகவின் எதிரி யார் என்று கேட்டார். அதற்கு சற்றும் யோசிக்காத உதயநிதி ஸ்டாலின், தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் இருக்குங்க என்று சட்டென்று கூறி விட்டு கிளம்பினார்.

வரும் சட்டசபைத் தேர்தல் களத்தில் திமுகவுக்கு தவெக கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தவெக தலைமையில் கூட்டணி அமையவிருப்பதாகவும், அதில் யாரெல்லாம் இடம் பெறக் கூடும் என்ற பரபரப்பான பேச்சும் அடிபடுகிறது. மேலும் விஜய்யும் கூட, திமுகவை தனது கொள்கை எதிரி என்று அறிவித்து சூட்டைக் கிளப்பி விட்டுள்ளார். இதுதொடர்பான விவாதங்கள் இன்னும் கூட முடியவில்லை.
விஜய்யின் வருகை, அவரது கட்சிக்கு கூடி வரும் இளைஞர் பட்டாளத்தின் ஆதரவு ஆகியவற்றை திமுகவும் கவனிக்காமல் இல்லை. அதற்கேற்ப அது தனது பணிகளையும் முடுக்கி விட்டு வருகிறது. விஜய்யின் வருகையை ஊகித்துதான் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினும் விடாமல் தொடர்ந்து சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். கிடைக்கும் கேப்பில் எல்லாம் எதிராளிகளுக்கு அதிரடியாக பதில் கொடுத்து வருகிறார். இந்த நிலையில்தான் திமுகவின் எதிரி யார் என்ற கேளவிக்கு இப்படி ஒரு பதிலை அளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}