கோடை விடுமுறையில் பள்ளியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு

Jun 27, 2025,03:21 PM IST
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  கோடை விடுமுறையில் பள்ளியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர்  ஊற்றிய   ஆசிரியர்களுக்கு பள்ளியில் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அதிகளவில் மரம் மற்றும் செடிகள் உள்ளன. கோடை கால விடுமுறையின் போது இந்த மரம் மற்றும் செடிகளுக்கு நீர் ஊற்றுவது கடினமான ஒன்றாக இருந்து வந்தது. அந்த பணியை அங்கு பணி புரியும் ஆசிரியர்களே தாங்கலாக முன்வந்து செய்துள்ளனர்.





அங்குள்ள அனைத்து மரங்களுக்கும், பள்ளியில் வெளியே நிழல் தரும் செடிகளுக்கும் கோடை விடுமுறையில் நாள் தவறாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தனர் ஆசிரியைகள்  முத்துமீனாள்,  முத்துலட்சுமி, வள்ளி மயில்  ஆகியோர். இவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கி கவுரவித்துள்ளார்.





இப்பள்ளி முழுவதும் நல்ல முறையில் நிழல் தரும் மரங்கள் , செடிகள் வளர்ந்து உள்ளன .பள்ளியின் வெளியேயும் சாலை ஓரத்தில் உள்ள புதிய மரச்செடிகளுக்கும் பள்ளி ஆசிரியைகள் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இளையராஜாவுக்கு 1540.. கார்த்திக் சுப்பராஜுக்கு 10.. ஒரு ஸ்வீட் செய்தி!

news

கடினமான பாதைகள்.. நமது அசாதாரண இலக்கை உணர்த்தும் சான்று!

news

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடிதத்தில் உள்ளது என்ன.. யாருக்கான மெசேஜ் இது?

news

மே 20ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

news

பேரம் பேச வேண்டிய அவசியமில்லை – விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்

news

பெருந்தன்மையின் பொருள்.. விஷால் விளையாட்டுக்கள் (19)

news

பொது வாழ்வில் இருந்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஓய்வு அறிவிப்பு! அதிர்ச்சியில் திமுகவினர்

news

சேலத்து மாம்பழம்.. பெங்களூரா மாம்பழம்... தித்திப்பா சாப்பிடுவோம்!

news

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்...காரணம் இது தான்

அதிகம் பார்க்கும் செய்திகள்