கோடை விடுமுறையில் பள்ளியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு

Jun 27, 2025,03:21 PM IST
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  கோடை விடுமுறையில் பள்ளியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர்  ஊற்றிய   ஆசிரியர்களுக்கு பள்ளியில் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அதிகளவில் மரம் மற்றும் செடிகள் உள்ளன. கோடை கால விடுமுறையின் போது இந்த மரம் மற்றும் செடிகளுக்கு நீர் ஊற்றுவது கடினமான ஒன்றாக இருந்து வந்தது. அந்த பணியை அங்கு பணி புரியும் ஆசிரியர்களே தாங்கலாக முன்வந்து செய்துள்ளனர்.





அங்குள்ள அனைத்து மரங்களுக்கும், பள்ளியில் வெளியே நிழல் தரும் செடிகளுக்கும் கோடை விடுமுறையில் நாள் தவறாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தனர் ஆசிரியைகள்  முத்துமீனாள்,  முத்துலட்சுமி, வள்ளி மயில்  ஆகியோர். இவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கி கவுரவித்துள்ளார்.





இப்பள்ளி முழுவதும் நல்ல முறையில் நிழல் தரும் மரங்கள் , செடிகள் வளர்ந்து உள்ளன .பள்ளியின் வெளியேயும் சாலை ஓரத்தில் உள்ள புதிய மரச்செடிகளுக்கும் பள்ளி ஆசிரியைகள் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!

news

டெல்லியில் முதல் முறையாக செயற்கை மழை...காற்றின் தரத்தை சீராக்க புதிய முயற்சி

news

மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

news

ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

news

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு

news

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

திருவள்ளூருக்கு ஆரஞ்சு...சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

news

2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

news

ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்

அதிகம் பார்க்கும் செய்திகள்