கோடை விடுமுறையில் பள்ளியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு

Jun 27, 2025,03:21 PM IST
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  கோடை விடுமுறையில் பள்ளியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர்  ஊற்றிய   ஆசிரியர்களுக்கு பள்ளியில் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அதிகளவில் மரம் மற்றும் செடிகள் உள்ளன. கோடை கால விடுமுறையின் போது இந்த மரம் மற்றும் செடிகளுக்கு நீர் ஊற்றுவது கடினமான ஒன்றாக இருந்து வந்தது. அந்த பணியை அங்கு பணி புரியும் ஆசிரியர்களே தாங்கலாக முன்வந்து செய்துள்ளனர்.





அங்குள்ள அனைத்து மரங்களுக்கும், பள்ளியில் வெளியே நிழல் தரும் செடிகளுக்கும் கோடை விடுமுறையில் நாள் தவறாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தனர் ஆசிரியைகள்  முத்துமீனாள்,  முத்துலட்சுமி, வள்ளி மயில்  ஆகியோர். இவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கி கவுரவித்துள்ளார்.





இப்பள்ளி முழுவதும் நல்ல முறையில் நிழல் தரும் மரங்கள் , செடிகள் வளர்ந்து உள்ளன .பள்ளியின் வெளியேயும் சாலை ஓரத்தில் உள்ள புதிய மரச்செடிகளுக்கும் பள்ளி ஆசிரியைகள் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Anitha Radhakrishnan: முதல்வருக்கு எதிராக அவதூறு பேச்சு.. திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது

news

உச்சநீதிமன்றத்தை நாடும் திமுக: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிராக அதிரடி முடிவு

news

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் விலகல்

news

குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் முன்ஜாமீன் கோரி மனு

news

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதி

news

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் நாளை ஆஜராக உத்தரவு

news

எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது : மு.க.ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்

news

சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

news

"கோயில்களில் முறைகேடா? இனி நேரடியாக புகார் அளிக்கலாம்" – அமைச்சர் அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்