சென்னை: மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் நிறுவனம் மூலம் ரூபாய் 525 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், வின் டிவி உரிமையாளரும், யாதவ மகாசபை தலைவர் மற்றும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவருமான தேவநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் தேவநாதன் யாதவ். தேவநாதன் மயிலாப்பூரில் உள்ள இந்து சாசுவத நிதி லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பது நினைவிருக்கலாம்.

தேர்தல் சமயத்தில் இவர் மீது பண மோசடி குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனம் மூலம் அதிக வட்டி தருவதாக மக்களிடம் முதலீடுகளைப் பெற்று 525 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இவர் மீது 140க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்த நிலையில் தேவநாதனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தில் 5000க்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு நிதியை வைத்திருப்பதாகவும் பலர் உறுப்பினராக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் நிரந்தர வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் முதிர்வு காலம் முடிந்தும் முதிர்ச்சி தொகையை இதுவரை வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தேவநாதன் மீது தொடர்ந்து புகார் எழுந்த நிலையில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.
அண்ணாமலை கண்டனம்:
இந்தக் கைது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள அறிக்கையில்,
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர் தேவநாதன் யாதவ் தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன்.
மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில்
தமிழ்நாடு பாஜக உறுதியாக உள்ளது. தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, முதலீட்டாளர்கள் அனைவருக்கும் இதனை உறுதி செய்ய வேண்டும்.
அதே நேரத்தில், திமுக அரசின் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தோல்வியைச் சுட்டிக் காட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை அச்சுறுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றால், அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}