சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் படத்தின் இயக்குனர் அந்தோணி பாக்கியராஜின் திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இனிதே நடந்து முடிந்தது. இதில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமகளை வாழ்த்தினர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் இரும்புத்திரை மற்றும் விசுவாசம் படங்களில் மூலம் ரைட்டராக அறிமுகமானவர் அந்தோணி பாக்கியராஜ். இவர் பல படங்களில் பணிபுரிந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்த சைரன் படம் சமீபத்தில் வெளியானது. ஆனால் இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட இப்படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் சைரன் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இயக்குனர் அந்தோணி பாக்கியராஜ் தனது காதலி ரம்யாவை இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரம் பிடித்தார் . இவர்களுடைய திருமணமும் தேவாலயத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்று மாலை சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள பி ஆர் பேலஸில் அந்தோணி பாக்யராஜின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நடிகர்கள் ஜெயம் ரவி- ஆர்த்தி ரவி, சமுத்திரக்கனி, தயாரிப்பாளர்கள் மோகன், சுஜாதா, விஜயகுமார், தனஞ்செயன், இயக்குனர்கள் சிவா, ஆர் ரவிக்குமார், அருண் ராஜா காமராஜ், சாம் ஆன்டன், பிஎஸ் மித்திரன், பி விருமாண்டி, எம் ஆர் மாதவன், கிஷோர் ராஜ்குமார், ஆர். சபரிமுத்து, சண்முகம் முத்துசாமி, டிஓபி சரவணன், பாடலாசிரியர்கள் சினேகன் -கனிகா சிநேகன், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}