மதுரையில் அதிமுக மாநாடு.. தமிழ்நாடு முழுவதும் திமுகவின் நீட் போராட்டம்.. பரபரப்பு!

Aug 19, 2023,03:06 PM IST
சென்னை: மதுரையில் அதிமுக பிரமாண்ட மாநாட்டை நாளை நடத்தவுள்ள நிலையில் திமுக தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வை எதிர்த்து பிரமாண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு என்ற பெயரில் மதுரையில் பிரமாண்ட மாநாட்டை அதிமுக நாளை நடத்தவுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் அரசியல் மாநாடு என்பதால் அதிமுக தரப்பு பெரும் உற்சாகத்துடன் உள்ளது.



இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி நடந்து முடிந்துள்ளன. நாளை மாநாட்டுக்காக தற்போதே அதிமுகவினர் மதுரையில் குவியத் தொடங்கி விட்டனர். ஏற்பாடுகள் தடபுடலாக உள்ளன. மதுரை மாநாட்டில் 15 லட்சம் பேர் கலந்து கொள்���ார்கள்,இது பெரும் திருப்புமுனையாக அமையும், அடுத்த லோக்சபா தேர்தலில் இதன் தாக்கம் தெரியும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நாளை திமுக பெரும் போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில்  நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆளுநர் ஆர். என். ரவியின் போக்கைக் கண்டித்தும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது திமுக. இந்த போராட்டத்தை திமுகவின் மாணவர் அணி, இளைஞர் அணி மற்றும் மருத்துவர் அணி ஆகியவை இணைந்து நடத்தவுள்ளன.

இந்த போராட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மாநாடு நடைபெறும் சமயத்தில் அதே நாளில் திமுகவின் போராட்டமும் நடைபெறுவதால் தமிழ்நாடு முழுவதும் இப்போதே பரபரப்பாகியுள்ளது.

ஆனால் அதிமுக மாநாட்டை இருட்டடிப்பு செய்யவே திமுக வேண்டும் என்றே போராட்டத்தை அறிவித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,  மக்களை திசை திருப்பவும், அதிமுக மாநாட்டை இருட்டடிப்பு செய்யவுமே இந்தப் போராட்டத்தை திமுக அறிவித்துள்ளது.  அவர்கள்தான் நீட்டைக் கொண்டு வந்ததே.  இப்போது தங்களது தவறுகளை மறைக்க நாடமாடுகிறார்கள். நீட் குறித்துப் பேச திமுகவுக்குத் தகுதியே கிடையாது என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்