சென்னை: கூட்டணி குறித்த அண்ணாமலை கருத்துக்கு, இந்த நக்கல் நையாண்டி எல்லாம் வேற கட்சிகிட்ட வைச்சிக்கோங்க என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் இன்று சென்னை உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை விருப்ப மனுவை பெற்று அதற்கான விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி திரும்பி அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரும்ப மனு வழங்கும் இடத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூட்டணி குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு பதில் அளித்தார்.

கூட்டணிக்கான கதவு மட்டுமில்லை, ஜன்னலையும் திறந்து வச்சிருக்கோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். நக்கல் நையாண்டி எல்லாம் வேற கட்சியில் வைத்துக்கோங்க, இந்த நக்கல் நையாண்டி எல்லாம் எங்க கட்சியில் எடுபடாது. நாங்கள் தெளிவா இருக்கோம். அவர் சொல்லும் கருத்துக்கள் எல்லாம் வேற கட்சிக்குதான்.
நாங்க எடுத்த முடிவில் தெளிவாக உள்ளோம். எங்களை பொருத்தவரை எடுத்த முடிவில் இருந்து பின் வாங்குற ஆள் இல்லை. நீங்க எந்த நேரத்தில் கேட்டாலும் பிஜேபியோட ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. கண்டிப்பாக நாங்கள் பிஜேபியுடன் வரவும் இல்லை கூட்டணியும் இல்லை. இந்த தேர்தலில் ஒரு மகத்தான கூட்டணி நிச்சயமாக இருக்கும். உரிய நேரத்தில் மகத்தான கூட்டணியை பொதுச் செயலாளர் அறிவிப்பார்.
உண்மை தொண்டர்கள் அதிமுகவில் நீடிக்கிறார்கள். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிள்ளை பிடிக்கும் வேலை செய்து வருகிறார். அண்ணாமலையின் தாடியை பார்க்கும் போது மாயாண்டி பூச்சாண்டி மாதிரி தான் இருக்கிறது. பூச்சாண்டியை பார்த்து மற்ற கட்சிகள் பயப்படலாம், நாங்கள் பயப்பட மாட்டோம்.
திரிஷா குறித்த பேச்சுக்குக் கண்டனம்
ஒரு நடிகை பற்றி அப்படி பேசி இருக்கக் கூடாது. நடிகை திரிஷா எந்த அளவிற்கு மன கஷ்டப்பட்டு டுவிட் போட்டு இருக்கிறார். அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ வி ராஜு மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகைகளின் பெண்மையை இழிவுபடுத்தி பேசக்கூடாது. ஏவி ராஜுவின் பேச்சை நிச்சயமாக ஏற்க முடியாது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}