- கவிதாயினி டாக்டர் எஸ். மணிமேகலை, ஈரோடு
காதல் என்றும் நிலைக்கும்
கனவு என்றும் நிறைக்கும்
மொட்டு நினைவில் துளிர்க்கும்
மலர்கள் மனதில் மணக்கும்
அலைகள் கடலில் ஓய்ந்திடலாம்
சிலைகள் சிறக்க பிறந்திடலாம்
மலைகள் குறுக்கே தடுத்திடலாம்
வலைகள் வீசியே வளர்த்திடலாம்
பார்வை தொடும் உள்ளம்
பாசம் தொடும் நேசம்

இருவர் விழிகளிலும் மோதல்
கருத்து வளர்த்திடும் சாதல்
விருப்பம் ஒத்துப்போகின் ஊடல்
நினைவோ என்றும் மறையாது
காதலோ என்றும் அழியாது!
{{comments.comment}}