- முனைவர் தி. தங்கலட்சுமி
உரைகாரன்
பொருள் பொதிந்த இவ்வாழ்வைக்
கொண்டு கூட்டிப் பொருள் கொண்டு,
கொண்டு செலுத்திடும் இறைவா!
நீயோர் இலக்கண உரைகாரனோ?!
--
மௌனம்
உலகின் ஆகச் சிறந்த
உன்னத மொழி!
அகமெல்லாம் ஆனந்தம்
புறமெல்லாம் புன்னகை!
--
நம்பிக்கை

மனித வாழ்வில் உயிராய்
ஓர் இலட்சியம் வேண்டும்!
எண்ணிய இலட்சியம் நிறைவேற
மனதில் உறுதி வேண்டும்!
எளிதாய்க் கிட்டும்
வெற்றியின் மாண்பைவிட
கடுவ(லி)ழி கடந்த இலக்கை
அடையும் மதிப்பே உயர்வு!
இலக்கை நிர்ணயி!
நிச்சயித்த இலக்கை அடைய
நேரிய வழி வகுத்திடு!
வகுத்திட்ட வழிதனில்
வலிவுடன் நடைபோடு!
மெய் வருத்த முயற்சி செய்;
முயற்சி தோற்றிடின்
மெய்யை வருத்தி மாய்க்காதே!
இலக்கை எட்டிட
நம்பிக்கை எனும்
நண்பனைக் கைக்கொள்!
உன்னுள் ஆழோடிய
வேரெனப் பதியனிடு!
நம்பிக்கை வேர் இறுக இறுக
இலட்சியக் கனி உறுதி! உறுதி!!
(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
தோஷங்கள் தொற்றிட தேசங்கள் தோற்றது மண்ணே
Short and Sweet Story: ஒரு 5 பைசா படுத்திய பாடு!
Everything had beauty.. ஆனால் எல்லோராலும் காண முடியாதது!
ஆடி மாதம் அம்மன் மாதம்
Short Story: கிணறு ஒரு சுகம்!
ஆடி வெள்ளி!
{{comments.comment}}