Drumsticks: கிடுகிடு வென உயர்ந்து வரும் முருங்கை விலை.. கிலோ ரூ.100.. எப்படி சாம்பார் வைக்கிறது!

Nov 28, 2024,06:48 PM IST

சென்னை: சென்னையில் கோயம்பேடு சந்தையில் கிலோ முருங்கைக்காய் ரூ.100க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் முருங்கைக்காய் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முருங்கைக்காய் பெரும்பாலானவர்கள் விரும்பி சாப்பிடும் காய்களில் ஒன்று. முருங்கை மரத்தில் இருந்து பெறப்படும் இந்த காய், அதன் பூ, இலை ஆகியவை மருந்துவ குணமுடையதாகும்.  முருங்கைக்காய் மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. முருங்கை காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுப்பதுடன், தாது உற்பத்தியை அதிகரிக்கிறது. இதை வாரம் 2 முறை சாப்பிட்டால் ரத்தமும், சீறுநீரக பாதையும் சுத்தம் அடையும். 



இந்தகைய மருத்துவ குணமுடைய முருங்கைக்காய் ஒரு காய்  ஒரு ரூபாய்க்கும், இரண்டு ரூபாய்கைக்கும் விற்கப்பட்டு வந்தது. இதனை அனைத்து தரப்பினர்களும் வாங்கி சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஏழை எளிய மக்களின் பிரதான காயாகவும் இது இருந்து வருகிறது. சாம்பார் என்றால் முருங்கைக்காய் சாம்பார் தான். இதற்கு ஈடு  இணை வேறு எந்த சாம்பாரிலும் இல்லை என்று சொல்லலாம். அந்த சாம்பரின் மனம், சுவை இரண்டும் சூப்பராக இருக்கும். முருங்கைக்காய் சாம்பாரின் மனம் அண்டை அயலாரையும் சுண்டி இழுக்கும் தன்மை கொண்டது. 

இத்தகைய சிறப்புடைய முருங்கக்காய் சாமானிய மக்களின் முக்கிய உணவாக இருந்து வரும் நிலையில், தற்போது யானை விலை, குதிரை விலை என அதிகரித்து வருவதால், சாமானிய மக்கள் இந்த காயை விடுத்து விலை மலிவாக விற்கப்பட்டு வரும் காய்கறிகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். சாமானிய மக்கள் வாங்கும் விலையில் இருந்த இந்த முருங்கைக்காய் சென்னையில், கிலோ ரூ.100க்கும், மதுரையில் கிலோ ரூ.70 மற்றும் 80க்கும் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் முருங்கைக்காய் பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தற்போது, தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் விளைச்சல் கணிசமாக குறைந்துள்ளது. இதனால், சுற்றுவட்டாரத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் கணிசமாக குறைந்துள்ளது. அதேபோல் பனிப்பொழிவால் முருங்கைக் காயின் விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சந்தைக்கு வரும் முருங்கைக்காயின் வரத்தும் மிகக் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கைக்காய் விலை 40 முதல் 50 வரை விற்கப்பட்டு வந்த விலை தற்போது கிடு கிடு என உயர்ந்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு

news

ஆடலரசன் நடராஜ பெருமாநுக்கு உகந்த.. ஆனித் திருமஞ்சனம்

news

Power Of ‘எனக்குத் தெரியவில்லை’.. ‘I don't know’

news

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!

news

Tamil Poem: மாயவலை

news

"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி

news

சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

news

"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை

news

விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு...விரைவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்