Drumsticks: கிடுகிடு வென உயர்ந்து வரும் முருங்கை விலை.. கிலோ ரூ.100.. எப்படி சாம்பார் வைக்கிறது!

Nov 28, 2024,06:48 PM IST

சென்னை: சென்னையில் கோயம்பேடு சந்தையில் கிலோ முருங்கைக்காய் ரூ.100க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் முருங்கைக்காய் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முருங்கைக்காய் பெரும்பாலானவர்கள் விரும்பி சாப்பிடும் காய்களில் ஒன்று. முருங்கை மரத்தில் இருந்து பெறப்படும் இந்த காய், அதன் பூ, இலை ஆகியவை மருந்துவ குணமுடையதாகும்.  முருங்கைக்காய் மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. முருங்கை காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுப்பதுடன், தாது உற்பத்தியை அதிகரிக்கிறது. இதை வாரம் 2 முறை சாப்பிட்டால் ரத்தமும், சீறுநீரக பாதையும் சுத்தம் அடையும். 



இந்தகைய மருத்துவ குணமுடைய முருங்கைக்காய் ஒரு காய்  ஒரு ரூபாய்க்கும், இரண்டு ரூபாய்கைக்கும் விற்கப்பட்டு வந்தது. இதனை அனைத்து தரப்பினர்களும் வாங்கி சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஏழை எளிய மக்களின் பிரதான காயாகவும் இது இருந்து வருகிறது. சாம்பார் என்றால் முருங்கைக்காய் சாம்பார் தான். இதற்கு ஈடு  இணை வேறு எந்த சாம்பாரிலும் இல்லை என்று சொல்லலாம். அந்த சாம்பரின் மனம், சுவை இரண்டும் சூப்பராக இருக்கும். முருங்கைக்காய் சாம்பாரின் மனம் அண்டை அயலாரையும் சுண்டி இழுக்கும் தன்மை கொண்டது. 

இத்தகைய சிறப்புடைய முருங்கக்காய் சாமானிய மக்களின் முக்கிய உணவாக இருந்து வரும் நிலையில், தற்போது யானை விலை, குதிரை விலை என அதிகரித்து வருவதால், சாமானிய மக்கள் இந்த காயை விடுத்து விலை மலிவாக விற்கப்பட்டு வரும் காய்கறிகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். சாமானிய மக்கள் வாங்கும் விலையில் இருந்த இந்த முருங்கைக்காய் சென்னையில், கிலோ ரூ.100க்கும், மதுரையில் கிலோ ரூ.70 மற்றும் 80க்கும் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் முருங்கைக்காய் பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தற்போது, தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் விளைச்சல் கணிசமாக குறைந்துள்ளது. இதனால், சுற்றுவட்டாரத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் கணிசமாக குறைந்துள்ளது. அதேபோல் பனிப்பொழிவால் முருங்கைக் காயின் விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சந்தைக்கு வரும் முருங்கைக்காயின் வரத்தும் மிகக் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கைக்காய் விலை 40 முதல் 50 வரை விற்கப்பட்டு வந்த விலை தற்போது கிடு கிடு என உயர்ந்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா

news

RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

news

தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது

news

இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!

news

இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!

news

பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு

news

சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?

news

பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்

news

Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்