சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும். அதே சமயத்தில் அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது.
8.2.24 மற்றும் 9.2.24 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும்.
லைட்டா மழை பெய்ய வாய்ப்பு
10,11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், ஏனைய இடங்களில் வறண்ட வானிலை நிலவும் எனவும் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கும் வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை 31- 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட பல இடங்களில் இப்போதே லேசாக வெயில் வாட்டி எடுக்க ஆரம்பித்திருக்கிறது. கோடை காலம் நெருங்கி வருவதால் வெயிலைச் சந்திக்க மக்களும் ஆயத்தமாகி வருகின்றனர். பல இடங்களில் பகலில் நன்றாக வெயில் சுட்டெரிக்கவும் ஆரம்பித்துள்ளது.
புயலையும் பார்த்தாச்சு.. 2 பெரு வெள்ளத்தையும் பார்த்தாச்சு.. இந்த வெயிலையும் ஒரு கை பார்த்துடுவோம்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}