சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும். அதே சமயத்தில் அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது.
8.2.24 மற்றும் 9.2.24 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும்.

லைட்டா மழை பெய்ய வாய்ப்பு
10,11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், ஏனைய இடங்களில் வறண்ட வானிலை நிலவும் எனவும் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கும் வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை 31- 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட பல இடங்களில் இப்போதே லேசாக வெயில் வாட்டி எடுக்க ஆரம்பித்திருக்கிறது. கோடை காலம் நெருங்கி வருவதால் வெயிலைச் சந்திக்க மக்களும் ஆயத்தமாகி வருகின்றனர். பல இடங்களில் பகலில் நன்றாக வெயில் சுட்டெரிக்கவும் ஆரம்பித்துள்ளது.
புயலையும் பார்த்தாச்சு.. 2 பெரு வெள்ளத்தையும் பார்த்தாச்சு.. இந்த வெயிலையும் ஒரு கை பார்த்துடுவோம்.
ஒத்தசடை போட்டு ஒரு ரோஜா காதோரம்!
தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே தாக்கல்
யார் மேலோர்? யார் கீழோர்?
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
உழுது விளைந்த நிலம் ஊத்துத் தண்ணீ பாஞ்ச நிலம்
டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா
காமன்வெல்த் பழுதூக்குதல் ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் அறிவிப்பு
சிந்தனைச் சிதறல்.. கற்றுக் கொடுத்தோம்.. கற்றுக் கொள்கிறோம்.. காலத்தின் கட்டாயம்!
Dr APJ Abdul Kalam: ஆன்மிக பூமியில் முளைவிட்ட அறிவியல் பயிர்.. அப்துல் கலாம்!
{{comments.comment}}