டெல்லி: திருமணங்களை வெளிநாடுகளில் வைக்காமல் இந்தியாவிலேயே வைத்தால் இந்திய பொருளாதாரம் மேம்படும். திருமணத்திற்காக பொருட்கள் வாங்கும்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். அது நியாயமான கருத்துதான் என்று பலரும் கூறியுள்ளனர்.
எந்த நாட்டில் வேலை செய்து வந்தாலும், வசித்து வந்தாலும், கடைசியில் திருமணம் என்றால் தங்கள் பிறந்த ஊரில் வைப்பதை தான் வழக்கமாக எல்லாரும் பின்பற்றி வந்தார்கள். சிலர் பிறந்த ஊரை விட்டு வந்து நிறைய ஆண்டுகள் ஆகி விட்டதால், தாங்கள் தற்சமயம் வசித்து வரும் ஊரில் திருமணங்களை நடத்துவதும் வழக்கமாகி விட்டது. இப்போது அதுவும் மாறி வெளிநாடுகளில் திருமணம் செய்து கொண்டு வர ஆரம்பித்து விட்டனர்.
மிகவும் செல்வச் செழிப்பில் உள்ளவர்கள் வெளிநாடுகளில் திருமணம் செய்வதை கெளரவம் என்று தற்பொழுது நினைத்து வருகின்றனர். குறிப்பாக இந்திய பிரபலங்கள் பலரும் வெளிநாடுகளில் அதிகளவில் திருமணம் செய்து கொள்கின்றனர். தீபிகா படுகோனே- ரன்வீர் சிங், அனுஷ்கா ஷர்மா - விராத் கோலி, ராணி முகர்ஜி - ஆதித்யா சோப்ரா, அம்பானி மகன்கள் திருமணம் என்று செல்லிக்கொண்டே போகலாம். இதனால் இந்திய பணம் வெளிநாடுகளுக்கு செல்கிறது.
இன்னும் சிலர் சுற்றுலாத்தலங்கள் நிரம்பிய நாடுகளுக்குப் போய் வித்தியாசமான முறையில் திருமணம் செய்கின்றனர். அதாவது விமானத்தில் பறந்தபடி, பாராசூட்டிலிருந்து குதித்து கல்யாணம் செய்வது, நீருக்குள் மூழ்கியபடி கல்யாணம் செய்வது என்று வித்தியாசமாக யோசித்து கல்யாணம் செய்கின்றனர்.
இதைத் தான் மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலமாக மோடி போசியுள்ளார். ஓவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருவது அனைவரும் அறிந்ததே.
இந்த மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பேசும் போது, இந்தியர்கள் சிலர் திருமணங்களை வெளிநாடுகளில் வைக்கின்றனர். இது தேவை தானா? நமது நட்டிலேயே திருமணங்களை நடத்தினால், இந்திய பணம் இந்தியாவிலேயே இருக்கும். இந்திய பணம் வெளியே எங்கும் செல்லாமல் நாட்டுக்குள்ளேயே இருக்கும். ஆகவே மக்கள் அனைவரும் வெளிநாடுகளில் திருமணங்கைள நடத்தாமல் நாட்டுக்குள்ளே திருமண கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியதுடன் திருமணத்திற்கான பொருட்கள் வாங்கும்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனால் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று தெரிவித்துள்ளார்.
நியாயமான கருத்துதான்..!
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}