Amma's Love: அம்மா!

Jul 10, 2026,10:04 AM IST

- புலவர். சுதந்திரக்கவி ப.ஈஸ்வரநாதன்


பெண்ணின் பெருமையில்

தாய்மை தனிச்சிறப்பே..


இலக்கணமும் இதிகாசமும் 

இணைந்த இனிமையே...


அதிசயப் பிறப்பில் 

ஆருயிர் நட்பே...




முக்கனிச் சுவையே முத்தமிழ் அமுதே..


குடும்ப வாழ்வின் 

அணையாத  விளக்கே


அரவணைக்கும் அன்பினிலே 

ஆற்றலின் அழகே .... 


உலகே வியக்கும் 

உயிரின் சுவாசமே ...


உற்றார் உறவினர்களும் 

உபசரிக்கும் உன்னதமே ...


களங்கம் ஏற்படாத 

கண்ணியத் தாயே... 


கருவறையில் சுமக்கும் 

உண்மையின் உறைவிடமே...


வம்சம் தழைத்திட

வரலாறு போற்றிட..


வாழையடி வாழையென

வாழ்வெனக்குத் தந்தவளே...!


(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர். மற்றும் நெறியாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்