அம்மா!

Jul 10, 2026,10:04 AM IST

- புலவர். சுதந்திரக்கவி ப.ஈஸ்வரநாதன்


பெண்ணின் பெருமையில்

தாய்மை தனிச்சிறப்பே..


இலக்கணமும் இதிகாசமும் 

இணைந்த இனிமையே...


அதிசயப் பிறப்பில் 

ஆருயிர் நட்பே...




முக்கனிச் சுவையே முத்தமிழ் அமுதே..


குடும்ப வாழ்வின் 

அணையாத  விளக்கே


அரவணைக்கும் அன்பினிலே 

ஆற்றலின் அழகே .... 


உலகே வியக்கும் 

உயிரின் சுவாசமே ...


உற்றார் உறவினர்களும் 

உபசரிக்கும் உன்னதமே ...


களங்கம் ஏற்படாத 

கண்ணியத் தாயே... 


கருவறையில் சுமக்கும் 

உண்மையின் உறைவிடமே...


வம்சம் தழைத்திட

வரலாறு போற்றிட..


வாழையடி வாழையென

வாழ்வெனக்குத் தந்தவளே...!


(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர். மற்றும் நெறியாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்