- புலவர். சுதந்திரக்கவி ப.ஈஸ்வரநாதன்
பெண்ணின் பெருமையில்
தாய்மை தனிச்சிறப்பே..
இலக்கணமும் இதிகாசமும்
இணைந்த இனிமையே...
அதிசயப் பிறப்பில்
ஆருயிர் நட்பே...
முக்கனிச் சுவையே முத்தமிழ் அமுதே..
குடும்ப வாழ்வின்
அணையாத விளக்கே
அரவணைக்கும் அன்பினிலே
ஆற்றலின் அழகே ....
உலகே வியக்கும்
உயிரின் சுவாசமே ...
உற்றார் உறவினர்களும்
உபசரிக்கும் உன்னதமே ...
களங்கம் ஏற்படாத
கண்ணியத் தாயே...
கருவறையில் சுமக்கும்
உண்மையின் உறைவிடமே...
வம்சம் தழைத்திட
வரலாறு போற்றிட..
வாழையடி வாழையென
வாழ்வெனக்குத் தந்தவளே...!
(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர். மற்றும் நெறியாளர்)
CM Vijay to visit Karur: கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்.. பாதுகாப்புக்கு 6500 போலீசார் குவிப்பு
தந்தையின் பெருமை
நேரம்!
வேணு கானமோ! இராம பாணமோ!"
அம்மா!
கதிரொளி!
CM VIjay to visit Karur: முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்: செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன?
ஜூலை 15ல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு
கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை: இந்திய கம்யூனிஸ்ட் பரபரப்பு குற்றச்சாட்டு!
{{comments.comment}}