- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
என்னவளே!
நீ பேசும் பேச்சு எல்லாம்
வேணு கானமோ!
உன் பார்வை வீச்சு எல்லாம்
இராம பாணமோ!
உன் காதல் வார்த்தை எல்லாம்
எனக்குக் குயிலின் கீதமோ!
உன்னோடு வாழும் இந்த இல்லம்
இறைவன் ஆலயமோ!
கண்ணோடு கண் நோக்கி எனை
நீ காண்பது எல்லாம்
காவியமோ! அதை எழுத மீண்டும்
கம்பன் பிறக்க வேண்டுமோ!
நம் இல்லம் எப்போதும்
ஆனந்தக் குடிலோ!
அப்படி இருப்பது
கந்தன் கருணையோ!
நீ தேவதையோ!
தேன் தமிழோ!
இத் தென்னவனின்
மனங்கவர் மங்கையோ!
வா ஆரணங்கே!
வணங்குவோம் இறைவனையே!
அவன் வாழ்த்தட்டும்
நாம் நன்றாக வாழவே!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).
CM Vijay to visit Karur: கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்.. பாதுகாப்புக்கு 6500 போலீசார் குவிப்பு
தந்தையின் பெருமை
நேரம்!
வேணு கானமோ! இராம பாணமோ!"
அம்மா!
கதிரொளி!
CM VIjay to visit Karur: முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்: செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன?
ஜூலை 15ல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு
கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை: இந்திய கம்யூனிஸ்ட் பரபரப்பு குற்றச்சாட்டு!
{{comments.comment}}