EVKS Elangovan.. முழு அரசு மரியாதையுடன்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் இன்று மாலை தகனம்

Dec 15, 2024,10:28 AM IST

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டசபை உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் இன்று மாலை முழு அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மறைந்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் என பல தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இன்று பொதுமக்கள் அஞ்சலிக்கு உடல் வைக்கப்படவுள்ளது. அதன் பின்னர் மாலையில் உடல் தகனம் நடைபெறவுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும். அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 




இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


தந்தை பெரியார் ஈ வே ராமசாமி அவர்களின் அண்ணன் ஈவே கிருஷ்ணசாமியின் பேரனும் ஈவேகி சம்பத் சுலோச்சனா சம்பத் மகனும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவேகிச இளங்கோவன் 14. 12. 2024 அன்று இயற்கை எய்தினார். கடந்த 21.12.1948-இல் ஈரோட்டில் பிறந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவராக 1996 முதல் 2002 வரை பணியாற்றினார்.


2004ல் நாடாளுமன்ற உறுப்பினராக கோபிசெட்டிபாளையம் மக்களவைத் தொகுதியில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் ஒன்றிய அரசில் ஜவுளித்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்று சிறப்பான முறையில் பணியாற்றினார். தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் சிறப்பாக மக்கள் பணியாற்றினார். அரசியல், மக்கள் பணி, பொது வாழ்வு என அனைத்து தளங்களிலும் நீண்ட அனுபவம் கொண்டவர். 


தன் சிந்தனைக்கு சரியாகப்பட்டதை துணிவுடன் வெளிப்படுத்தியவர். அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பொது வாழ்வை போற்றும் விதமாக அவரது திருஉடலுக்கு அரசு மரியாதை உடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!

news

தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

news

பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!

news

ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?

news

நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)

news

மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!

news

மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!

news

எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)

news

சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்