சென்னை: இந்த நிமிடத்தில் கோலிவுட்டில் மிகப் பெரிய பிரமாண்ட பட நிறுவனமாக விளங்கி வரும் அந்த நிறுவனம் படத் தயாரிப்பை நிறுத்தி விட திட்டமிட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். கால ஓட்டத்தை சமாளித்துக் கொண்டு செயல்படக் கூடியவர்கள் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும். தமிழ்த் திரையுலகில் எத்தனையோ படத் தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தன. அவற்றில் இப்போது வரை இருக்கக் கூடியவை என்று பார்த்தால் ஜீரோ என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏவிஎம் நிறுவனம் இப்போது படத் தயாரிப்பில் ஈடுபடுவதில்லை. அதேபோல பல முன்னணி நிறுவனங்கள் பலவும் கூட தயாரிப்பை விட்டு விட்டன. தயாரிப்புச் செலவு அதிகமாக இருப்பது, நடிகர்களின் சம்பளம் அதிகமாக இருப்பது என பல காரணங்களை இதற்குச் சொல்லலாம்.
புதிதாக வந்த பட நிறுவனங்களும் கூட குறிப்பிட்ட காலம் வரைக்கும்தான் இருக்கின்றன. அதன் பிறகு அவை மெல்ல மெல்ல வீழ்ந்து மறைந்து போவதையும் பார்க்க முடிகிறது. ஏவி.எம் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை படத் தயாரிப்பில் இருந்த நிறுவனம்தான். ஆனால் சில பத்தாண்டுகளில் உருவாக்கப்பட்ட, உருவாகி வெளி வந்த பல பட நிறுவனங்கள் இப்போது காட்சியிலேயே இல்லை.
இந்த நிலையில் தற்போது கோலிவுட்டில் பிரபலமாக உள்ள ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் திரைப்படத் தயாரிப்பை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாம். இந்த நிறுவனத்திற்குத் தேவையான நிதியைக் கையாண்ட நபர் தற்போது பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ளதால், நிறுவனத்தின் பண வரவு பாதிக்கப்பட்டுள்ளதாம். மேலும் பல்வேறு சட்ட சிக்கல்களும் வரும் அபாயம் இருப்பதால் பேசாமல் எல்லாவற்றையும் நிறுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் அந்த நிறுவனம் உள்ளதாம்.
தற்போது முக்கியமான 3 படங்களை இந்த நிறுவனம் கையில் வைத்துள்ளது. இவற்றை முடித்த பிறகு தயாரிப்பை நிறுத்தி விட அது தீர்மானித்துள்ளதாம். இந்தத் தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்துக்கே இந்த கதியா என்று பலரும் ஆச்சரியமாக கேட்கிறார்களாம்.
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!
நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!
புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்
10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?
எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி
74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
{{comments.comment}}