ஃபெஞ்சல் புயல் + கன மழை எதிரொலி.. சென்னையில் 9 சுரங்கப்பாதைகள் மூடல்.. தாம்பரத்திலும் பாதிப்பு!

Nov 30, 2024,03:19 PM IST

சென்னை: சென்னையில் கனமழை காரணமாக மழை நீர் சூழ்ந்துள்ள 9 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.  அதேபோல கிழக்குத் தாம்பரம், ஜிஎஸ்டி சாலை இணைப்பு சுரங்கப் பாதையும் நீரால் சூழப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நேற்று ஃபெஞ்சல் புயலாக மாறியது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. சென்னையில் நேற்று தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் கனமழை பெய்து வருவதால் யாரும் வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை  முடங்கியுள்ளது. புயல் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. போக்குவரத்து வாகனங்கள் சாலைகளில் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து உள்ளன. இந்நிலையில் சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் 12 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால், 9 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. அவை, 

* எழும்பூர் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை 

* ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை

* ஆர்.பி.ஐ. சுரங்கப்பாதை

* பெரம்பூர் சுரங்கப்பாதை

* பழவந்தாங்கல் சுரங்கப்பாதை

* திருவொற்றியூர் அஜாக்ஸ் சுரங்கப்பாதை

* துரைசாமி சுரங்கப்பாதை

* மேட்லி சுரங்கப்பாதை

* சுந்தரம் பாயிண்ட் சுரங்கப்பாதை

ஆகிய 9 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.


இதேபோல தாம்பரத்திலும் ரயில்வே சுரங்கப் பாதையில் நீர் நிரம்பிக் காணப்படுகிறது. கிழக்கு தாம்பரம் - ஜிஎஸ்டி சாலையை இணைக்கும் சுரங்கப் பாதை இது. இது நிரம்பியிருப்பதால் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. சுரங்கப் பாதை மூடப்பட்டதால் மக்கள் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக பயணித்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்