சென்னை: சென்னையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பல இடங்களில் இணைய சேவையும், 108 சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தென் மண்டல பிஎஸ்என்எல் அலுவலத்தில் இன்று திடீர் என தீ பற்றி எரிந்தது. பிஎஸ்என்எல்லுக்கு சொந்தமான இந்த 8 மாடி கட்டிதத்தில் 2ம் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பரவியது. 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.

பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையில் பல இடங்களில் இணைய சேவை மற்றும் 108 சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துதல், நேரடியாக மின்சார அலுவலகத்திற்கு வந்து மின் கட்டணம் செலுத்ததுல் போன்ற சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் மின்சாரம் தொடர்பான புகார் அளிக்கும் மின்னகம் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
விபத்து ஏற்பட்டது காலை நேரம் என்பதால் ஒரு சில உழியர்களே இருந்தனர். அவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவே தீ விபத்திற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. இத தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}