சென்னை: சென்னையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பல இடங்களில் இணைய சேவையும், 108 சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தென் மண்டல பிஎஸ்என்எல் அலுவலத்தில் இன்று திடீர் என தீ பற்றி எரிந்தது. பிஎஸ்என்எல்லுக்கு சொந்தமான இந்த 8 மாடி கட்டிதத்தில் 2ம் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பரவியது. 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.

பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையில் பல இடங்களில் இணைய சேவை மற்றும் 108 சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துதல், நேரடியாக மின்சார அலுவலகத்திற்கு வந்து மின் கட்டணம் செலுத்ததுல் போன்ற சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் மின்சாரம் தொடர்பான புகார் அளிக்கும் மின்னகம் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
விபத்து ஏற்பட்டது காலை நேரம் என்பதால் ஒரு சில உழியர்களே இருந்தனர். அவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவே தீ விபத்திற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. இத தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிலுவை நாயகனின் ஏழு வார்த்தைகள்!
ஆளுக்கு முந்தி சீட் வாங்கியாச்சு.. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் திணறும் காங்., பாஜக!
தமிழ்நாட்டின் பெயரை பிரதமர் மாற்றுவார் என்பது அப்பட்டமான பொய்: நயினார் நாகேந்திரன்
எதையெல்லாம் செய்ய முடியாதோ அதையெல்லாம் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவது தான் திமுகவினரின் வேலை:விஜய்
திருச்சி கிழக்கில் விஜய்.. சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்!
விஜயகாந்த் குறித்து அவமரியாதை.. பியூஷ் கோயலின் சந்தர்ப்பவாத பேச்சு.. எல்.கே.சுதீஷ் கண்டனம்
மாலினியின் மாயாஜாலம்.. இல்லத்தரசி டூ யோகா ஆசிரியை - ஒரு தன்னம்பிக்கை பயணம்!
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பாம்: சென்னை வானிலை மையம் தகவல்!
தங்கம் விலை அதிரடி சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 குறைந்தது!
{{comments.comment}}