சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!

Dec 20, 2025,04:16 PM IST

சென்னை: சென்னையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பல இடங்களில் இணைய சேவையும், 108 சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.


சென்னை அண்ணா சாலையில் உள்ள தென் மண்டல பிஎஸ்என்எல் அலுவலத்தில் இன்று திடீர் என தீ பற்றி எரிந்தது. பிஎஸ்என்எல்லுக்கு சொந்தமான இந்த 8 மாடி கட்டிதத்தில் 2ம் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பரவியது. 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.




பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையில் பல இடங்களில் இணைய சேவை மற்றும் 108 சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துதல், நேரடியாக மின்சார அலுவலகத்திற்கு வந்து மின் கட்டணம் செலுத்ததுல் போன்ற சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் மின்சாரம் தொடர்பான புகார் அளிக்கும் மின்னகம் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 


விபத்து ஏற்பட்டது காலை நேரம் என்பதால் ஒரு சில உழியர்களே இருந்தனர். அவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவே தீ விபத்திற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. இத தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தானுக்கு 175 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.. 7 விக்கெட்களுக்கு 175 ரன்கள்

news

பாகிஸ்தான் பந்து வீச்சை வச்சு செய்த இஷான் கிஷன் அவுட்.. ஆனாலும் இந்தியா ஸ்டிராங்!

news

நவி மும்பை தமிழ் சங்க பொன்விழா.. விஜய் டிவி ஸ்டார்களின் இசை மழையில் நனைந்த ரசிகர்கள்!

news

சிவமே சிவமே அருள்வாய் சிவமே....!

news

அனல் பறக்கப் போகும் இந்தியா vs பாகிஸ்தான் மோதல்.. கொழும்பு டி20 போட்டியில் மழை குறுக்கிடுமா?

news

அற்புதங்கள் நிறைந்த .. சதுரகிரி சுந்தர மகாலிங்கம்‌ கோவில் மலைப்பயணம்!

news

Maha Shivaratri 2026.. இருள் நீங்கும் நேரம்.. மகா சிவராத்திரி!

news

சிவராத்திரி திருவருள் நாயகனே..... சிங்கார வேலனின் தந்தையே....!

news

கூட்டணி ஆட்சி பற்றி இனி யாரும் கேட்க மாட்டார்கள்...என்ன ஆர்.எஸ்.பாரதி இப்படி சொல்லிட்டார்?

அதிகம் பார்க்கும் செய்திகள்