சென்னை: சென்னையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பல இடங்களில் இணைய சேவையும், 108 சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தென் மண்டல பிஎஸ்என்எல் அலுவலத்தில் இன்று திடீர் என தீ பற்றி எரிந்தது. பிஎஸ்என்எல்லுக்கு சொந்தமான இந்த 8 மாடி கட்டிதத்தில் 2ம் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பரவியது. 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.

பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையில் பல இடங்களில் இணைய சேவை மற்றும் 108 சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துதல், நேரடியாக மின்சார அலுவலகத்திற்கு வந்து மின் கட்டணம் செலுத்ததுல் போன்ற சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் மின்சாரம் தொடர்பான புகார் அளிக்கும் மின்னகம் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
விபத்து ஏற்பட்டது காலை நேரம் என்பதால் ஒரு சில உழியர்களே இருந்தனர். அவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவே தீ விபத்திற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. இத தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜய் படைத்த புதிய சாதனை: தமிழ்நாட்டின் முதல் கூட்டணி அரசு.. நீண்ட கால கனவு நனவானது!
முதல்வர் விஜய் சர்க்கார்.. இளைஞர்கள் நிரம்பிய அமைச்சரவை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு இடம்?
புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு.. செங்கோட்டையன் இலாகா மாற்றம்
அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.க்கள் நிலை.. அடுத்து என்ன செய்ய போகிறார்கள்?
தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 19 மாவட்டங்களில் அமைச்சர்கள் இல்லை
அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு தமிழக அமைச்சரவையில் இடமில்லை!
விஜய் அமைச்சரவை: 23 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு.. 3 பெண்களுக்கு இடம்!
சிந்தனைச் சிதறல்.. வாய்ப்புகளுக்காக காத்திருங்கள்.. கிடைத்தால் விடாதீர்கள்
மனிதனின் இரு பக்கங்கள்: பலமும் பலவீனமும்
{{comments.comment}}