தக்காளியை தொடர்ந்து தேங்காய் விலையும் உயர்வு.. 2 சட்னியையும் மறந்துற வேண்டியதுதான்!

Oct 08, 2024,02:13 PM IST

சென்னை:   சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மட்டும் இல்லீங்க, தேங்காய் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.


சென்னை மட்டும் இன்றி தமிழகம் முழுவதிலும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில் தற்போது கடுமையான மழை பெய்து வருவதால் தக்காளி  உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளியின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது.வரத்து குறைவால் தக்காளி விலை எகிறி வருகிறது. நேற்று ரூ.110 விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.120க்கு விற்கப்பட்டு வருகிறது.


தக்காளியை தொடர்ந்து தேங்காய் விலையும் தற்போது அதிகரித்து வருகிறது. முன்னர் எல்லாம் ஒரு தேங்காய் இவ்வளவு என்று விற்கப்பட்டு வந்தது. தற்போது அந்த நிலை மாறி ஒரு கிலோ தேங்காயின் விலை ரூ.20 முதல் 30 என்று இருந்தது, தற்போது கிலோ தேங்காய் ரூ.60 முதல் ரூ.80க்கு  விற்கப்பட்டு வருகிறது. 




தேங்காய் வரத்து குறைவினால், இளநீர் விலையும் அதிகரித்துள்ளது. முதலில் பூண்டு விலை உயர்ந்தது. இதனையடுத்து தக்காளி, தேங்காய் என தொடர்ந்து ஒவ்வொன்றாக உயர்ந்து வருவதினால், இல்லத்தரசிகள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர்.


இன்றைய காய்கறி விலை....


தக்காளி ரூ 90-120

இஞ்சி 60-180

நெல்லிக்காய் 70-76 

பீன்ஸ் 38-150

பீட்ரூட் 40-80 

பாகற்காய் 15-30 

கத்திரிக்காய் 15-80

பட்டர் பீன்ஸ் 56-85

முட்டைகோஸ் 15-60

குடைமிளகாய் 10-30

கேரட் 45-82

காளிபிளவர் 20-40

சௌசௌ 10-25

கொத்தவரங்காய் 25-40 

தேங்காய் 60-80 

பூண்டு 180- 450

பச்சை பட்டாணி 130-160 

கருணைக்கிழங்கு 25-50

கோவக்காய் 10-15 

வெண்டைக்காய் 20-40 

மாங்காய் 100-180 

மரவள்ளி 40-55

நூக்கல் 15-40 

பெரிய வெங்காயம் 25-72 

சின்ன வெங்காயம் 70-90

உருளை 36-80

முள்ளங்கி 15-35 

சேனைக்கிழங்கு 60-65 

புடலங்காய் 20-30

சுரைக்காய் 15-30

பூசணி 15-20

முருங்கைக்காய் 30-120


இன்றைய பழங்களின் விலை நிலவரம்


ஆப்பிள் 120-260

வாழைப்பழம்  15-110

மாதுளை 120-300

திராட்சை 70-140

மாம்பழம் 30-200

தர்பூசணி 15-40

கிர்ணி பழம் 25-80

கொய்யா 24-100

நெல்லிக்காய் 25-80



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!

news

RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்

news

ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)

news

May Day: தொழிலாளர் தினம்.. உழைப்பில்லாமல் கிடைப்பது நிலைத்திருப்பது இல்லை!

news

Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!

news

May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'

news

மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

news

சித்திரை திருவிழா.. மதுரை குலுங்க.. கள்ளழகர் வைகை ஆற்றில் நாளை இறங்குகிறார்!

news

அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்