முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு.. தமிழ்நாட்டுக்கு மீண்டும் வருகிறது ஃபோர்டு நிறுவனம்!

Sep 13, 2024,04:53 PM IST

சென்னை:   தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் தனது ஆலையை மீண்டும் தொடங்க இருக்கிறது.


கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறிய ஃபோர்டு மீண்டும் தமிழ்நாட்டில் தனது தொழிற்சாலையை தொடங்குகிறது. ஃபோர்டு தனது சென்னை ஆலையை ஏற்றுமதி சந்தைகளுக்குத் தயாரிக்கும் வாகனங்களை தயாரிக்கும் திட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில், தமிழக அரசிடம் அதிகாரப்பூர்வமாக ஒரு கடிதத்தை சமர்ப்பித்துள்ளது. சென்னையில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கார் குறித்து விவரங்களை பின்னர் வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.




சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த தமிழக முதல்வருக்கும், ஃபோர்டு தலைமைக்கும் இடையே நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.போர்டு இன்டர்நேஷனல் மார்க்கெட்டிங் குழுமத்தின் தலைவர் கே ஹார்ட், சென்னை ஆலைக்கான பல்வேறு சாத்திய கூறுகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு அளித்து வரும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த முயற்சியானது இந்தியாவிற்கான ஃபோர்ட் நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும், தமிழ்நாட்டின் உற்பத்தித் திறனையும் பயன்படுத்தி புதிய உலக சந்தைகளை அடைவதற்கான அவர்கள் இலக்கை எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 


ஃபோர்டு தமிழ்நாட்டில் 12000 நபர்களை பணியில் அமர்த்த உள்ளது. மேலும், அடுத்த 3 ஆண்டுகுளில் 250 முதல் 3000 வேலையாட்களை நியமிக்கவும் ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள தனது லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவை, மார்க்கெட்டிங் மற்றும் உத்தரவாதக் கவரேஜ் ஆகியவற்றில் தொடர்ந்து உத்தரவாதம் வழங்க ஃபோர்டு நிறுவனம் உறுதியுடன் உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்