முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு.. தமிழ்நாட்டுக்கு மீண்டும் வருகிறது ஃபோர்டு நிறுவனம்!

Sep 13, 2024,04:53 PM IST

சென்னை:   தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் தனது ஆலையை மீண்டும் தொடங்க இருக்கிறது.


கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறிய ஃபோர்டு மீண்டும் தமிழ்நாட்டில் தனது தொழிற்சாலையை தொடங்குகிறது. ஃபோர்டு தனது சென்னை ஆலையை ஏற்றுமதி சந்தைகளுக்குத் தயாரிக்கும் வாகனங்களை தயாரிக்கும் திட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில், தமிழக அரசிடம் அதிகாரப்பூர்வமாக ஒரு கடிதத்தை சமர்ப்பித்துள்ளது. சென்னையில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கார் குறித்து விவரங்களை பின்னர் வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.




சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த தமிழக முதல்வருக்கும், ஃபோர்டு தலைமைக்கும் இடையே நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.போர்டு இன்டர்நேஷனல் மார்க்கெட்டிங் குழுமத்தின் தலைவர் கே ஹார்ட், சென்னை ஆலைக்கான பல்வேறு சாத்திய கூறுகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு அளித்து வரும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த முயற்சியானது இந்தியாவிற்கான ஃபோர்ட் நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும், தமிழ்நாட்டின் உற்பத்தித் திறனையும் பயன்படுத்தி புதிய உலக சந்தைகளை அடைவதற்கான அவர்கள் இலக்கை எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 


ஃபோர்டு தமிழ்நாட்டில் 12000 நபர்களை பணியில் அமர்த்த உள்ளது. மேலும், அடுத்த 3 ஆண்டுகுளில் 250 முதல் 3000 வேலையாட்களை நியமிக்கவும் ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள தனது லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவை, மார்க்கெட்டிங் மற்றும் உத்தரவாதக் கவரேஜ் ஆகியவற்றில் தொடர்ந்து உத்தரவாதம் வழங்க ஃபோர்டு நிறுவனம் உறுதியுடன் உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்