சென்னை: தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் தனது ஆலையை மீண்டும் தொடங்க இருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறிய ஃபோர்டு மீண்டும் தமிழ்நாட்டில் தனது தொழிற்சாலையை தொடங்குகிறது. ஃபோர்டு தனது சென்னை ஆலையை ஏற்றுமதி சந்தைகளுக்குத் தயாரிக்கும் வாகனங்களை தயாரிக்கும் திட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில், தமிழக அரசிடம் அதிகாரப்பூர்வமாக ஒரு கடிதத்தை சமர்ப்பித்துள்ளது. சென்னையில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கார் குறித்து விவரங்களை பின்னர் வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த தமிழக முதல்வருக்கும், ஃபோர்டு தலைமைக்கும் இடையே நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.போர்டு இன்டர்நேஷனல் மார்க்கெட்டிங் குழுமத்தின் தலைவர் கே ஹார்ட், சென்னை ஆலைக்கான பல்வேறு சாத்திய கூறுகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு அளித்து வரும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த முயற்சியானது இந்தியாவிற்கான ஃபோர்ட் நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும், தமிழ்நாட்டின் உற்பத்தித் திறனையும் பயன்படுத்தி புதிய உலக சந்தைகளை அடைவதற்கான அவர்கள் இலக்கை எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஃபோர்டு தமிழ்நாட்டில் 12000 நபர்களை பணியில் அமர்த்த உள்ளது. மேலும், அடுத்த 3 ஆண்டுகுளில் 250 முதல் 3000 வேலையாட்களை நியமிக்கவும் ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள தனது லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவை, மார்க்கெட்டிங் மற்றும் உத்தரவாதக் கவரேஜ் ஆகியவற்றில் தொடர்ந்து உத்தரவாதம் வழங்க ஃபோர்டு நிறுவனம் உறுதியுடன் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}