நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!

Dec 05, 2025,06:31 PM IST

சென்னை: நான் எந்த சூழ்நிலையிலும், எப்போதுமே தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று திரும்பியுள்ள நிலையில், இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், 


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சென்று மரியாதை நிமிர்த்தமாகவே சந்தித்தேன். அதிமுகவை எம்ஜிஆர் எந்த நோக்கத்தில் உருவாக்கினாரோ, ஜெயலலிதா அந்த இயக்கத்தை எப்படி வெற்றிகரமாக வழிநடத்தி நிலைநிறுத்தினாரோ அந்த நிலையில் மீண்டும் அதிமுகவில் உருவாக வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம். இதுவே தமிழக மக்களின் கருத்தாக இருப்பதாக அமித்ஷாவிடம் தெரிவித்துள்ளேன்.




செங்கோட்டையனிடம் நானும் பேசவில்லை. அவரும் என்னுடன் பேசவில்லை. என்னுடைய அடுத்த கட்ட நகர்வு தமிழக மக்களின் எண்ணப்படி தான் இருக்கும். அதிமுகவில் இருந்து பிரிந்தவர் ஒன்று சேர வேண்டும் என்பதற்காகவே அமித்ஷாவைச் சந்தித்தேன். முன்னர் அதிமுகவில் உள்ள அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினேன். நான் எந்த சூழ்நிலையிலும் எப்போதும் தனிக்கட்சியைத் தொடங்குவேன் என்று சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!

news

“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?

news

மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!

news

வேறென்ன வேண்டும் எனக்கு.. அழகிய சிங்கரின் என்பா!

news

சிந்தனைச் சிதறல்..பணம்.. உழைப்பின் மதிப்பை உணர்த்தி தானும் உயரும் உயர் சாதனம்!

news

சித்தனாய்ப் புத்தனாய் இருந்த என்னை!

news

"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு

news

கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

news

Travel story: பனம் குருத்தில் செய்த ஊறுகாய்.. இன்னும் மறக்காத நாக்கு.. என்னா டேஸ்ட்டுப்பா!

அதிகம் பார்க்கும் செய்திகள்