சென்னை: நான் எந்த சூழ்நிலையிலும், எப்போதுமே தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று திரும்பியுள்ள நிலையில், இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில்,
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சென்று மரியாதை நிமிர்த்தமாகவே சந்தித்தேன். அதிமுகவை எம்ஜிஆர் எந்த நோக்கத்தில் உருவாக்கினாரோ, ஜெயலலிதா அந்த இயக்கத்தை எப்படி வெற்றிகரமாக வழிநடத்தி நிலைநிறுத்தினாரோ அந்த நிலையில் மீண்டும் அதிமுகவில் உருவாக வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம். இதுவே தமிழக மக்களின் கருத்தாக இருப்பதாக அமித்ஷாவிடம் தெரிவித்துள்ளேன்.

செங்கோட்டையனிடம் நானும் பேசவில்லை. அவரும் என்னுடன் பேசவில்லை. என்னுடைய அடுத்த கட்ட நகர்வு தமிழக மக்களின் எண்ணப்படி தான் இருக்கும். அதிமுகவில் இருந்து பிரிந்தவர் ஒன்று சேர வேண்டும் என்பதற்காகவே அமித்ஷாவைச் சந்தித்தேன். முன்னர் அதிமுகவில் உள்ள அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினேன். நான் எந்த சூழ்நிலையிலும் எப்போதும் தனிக்கட்சியைத் தொடங்குவேன் என்று சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.
150 ஆண்டுகளுக்குப் பிறகு நூலகத்திற்குத் திரும்பிய அரிய புத்தகம்,பட் அந்த நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு
Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?
முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை
மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்
காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு
2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!
{{comments.comment}}