சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தானில் நடந்த பாஜக கூட்டத்தில் இஸ்லாமியர்கள் குறித்துப் பேசியது கண்ணியம் தவறிய செயல். நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் நடந்த பாஜக கூட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமியர்கள் குறித்துக் கூறிய கருத்துக்கள் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இதைக் கண்டித்துள்ளனர். காங்கிரஸ் சார்பில் டெல்லியில் புகார் தரப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடுமையாக கண்டித்து அறிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும் நாட்டின் உயர் ஆட்சி பதவியில் உள்ள பாரத பிரதமர் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்து வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்தது அல்ல.
இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சி தலைவர்களும் ஆட்சி அதிகாரத்தில் மாண்புமிகு உயர் பதவியில் இருப்பவர்களும் இது போன்ற கருத்துக்களை தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும் மத நல்லிணக்கத்திற்கும் நல்லது.
அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அதன் உணர்வுகளை தூண்டுவதாகும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இது போன்ற மத துவேச கருத்துகள் யார் பேசினாலும் அது இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும் நாட்டை நலனுக்கு இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}