சென்னை: அதிமுகவில் இணைவது தொடர்பான விவகாரத்தில், நேற்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார். என்னை எச்சரிக்க உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை என அவர் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஆர்பி உதயகுமார் எந்த நிலையில் இருந்தார் என்பது குறித்து இப்போது பேசினால் நாகரிகமாக இருக்காது. இதனால் எனது குடும்பத்தை பற்றி பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தார் ஓ பன்னீர்செல்வம்.
இதற்கு பதிலடி கொடுத்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் தற்போது பேசியுள்ளார். பதவிக்காக எந்த எல்லைக்கும் போகும் ஓ. பன்னீர்செல்வம் எனக்கு எச்சரிக்கை விடுக்க எந்த தகுதியும் இல்லை என்று கூறியுள்ளார் ஆர்.பி. உதயகுமார்.
இது குறித்து அவர் கூறியதாவது:

மாண்புமிகு அம்மா அவர்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை குறைபாட்டில் தான் அப்போது அம்மா அவர்கள் தங்கள் மீது வைத்திருந்த அபிமானத்தைப் பற்றி சாமானிய தொண்டன் உதயகுமாரிடமும் பகிர்ந்து கொண்டார் என்பதை நான் வெளியில் சொன்னால் நாகரிகமாக இருக்காது. டாக்டர் வெங்கடேஷ் வீட்டில் நான் எந்த இடத்தில் அமர்ந்திருந்தேன் என்பதை தயவு செய்து சொல்லுங்கள். உங்களது காலில விழுந்து கேட்டுக் கொள்கிறேன். அதை உலகுக்குச் சொல்லுங்கள். நீங்கள் எந்த இடத்தில் அமர்ந்திருந்தீர்களோ அதே இடத்தில்தான் நானும் அமர்ந்திருந்தேன்.
இப்போது வேண்டுமானாலும் உங்களுடைய சுயநலத்தை தெரிந்து கொள்வதற்கு தங்க தமிழ்ச்செல்வன் தொடங்கி நைனார் நாகேந்திரன் வரை எத்தனையோ தலைவர்களை என்னால் பட்டியலிட்டு சொல்ல முடியும். தனக்கு பின்னாலும் முன்னாலும் எந்த ஒருவரும் அம்மாவின் கவனத்திற்கு, தலைமை உடைய கவனத்திற்கு வந்து விடக்கூடாது என்பதில் நீங்கள் கவனமாக இருப்பீர்கள். இப்போதும் தேனி மாவட்டத்திலேயே நீங்கள் கேட்டால் சொல்வார்கள்.
இதுதான் நீங்கள் கற்றுக் கொண்ட பாதை, தர்மம். ஆகவே உங்களை வணங்கி கேட்கிறேன் என்னை எச்சரிக்க வேண்டிய தகுதி உங்களுக்கு இல்லை. நான் எந்த எச்சரிக்கையையும் எதிர்கொள்ள தயாராகத்தான் இருக்கிறேன். இன்னும் விவாதிக்க வேண்டும் என்று நீங்கள் விருப்பப்பட்டால் நானும் தயாராகத்தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஆர்.பி. உதயகுமார்.
உண்மையிலேயே நமக்கு சுதந்திரம் இருக்கா .. Freedom for all
ஏழ்மை
பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?
சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்
திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி
பருப்பை போட்டு சாப்பிட்டவன் தான் ருசி சொல்லுவான்.. இன்று என்ன நாள் தெரியுமா!
பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
மாமன் அடிச்சானோ.. மல்லிகைப் பூ செண்டாலே.. கிறங்கடிக்கும் தாலாட்டுப் பாடல்கள்!
மூன்றாம் பிறை.. விருதுகளையும், இதயங்களையும் வென்ற படம்!
{{comments.comment}}