சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள முருகன் கோவில் மலைப் பாதையில் சுவாமி சிலைகளை சில விஷமிகள் உடைத்துப் போட்டிருக்கும் செயல் இதயத்தை நொறுங்க வைப்பதாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மலை உச்சியில் புகழ் பெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. புகழ் பெற்ற முருகன் தலங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தக் கோவிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவது வழக்கம். இந்தக் கோவிலில் சுவாமி சிலைகளை சில விஷமிகள் மலைப் பாதையில் உடைத்துப் போட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ஒரு வீடியோவுடன் அவர் எக்ஸ் தளத்தில் பதிவு போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பெருமைமிகு நமது விராலிமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில் மலைப்பாதையில் சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இதயத்தை நொறுங்கச் செய்கிறது. கடும் கண்டனத்துக்குரிய இழிவான இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி கடும் நடவடிக்கையை எடுத்திட வேண்டும்.
விராலிமலை முருகனை தரிசிக்க தமிழ்நாடு முழுவதுமிருந்து வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக, மலையேற சிரமப்படும் பக்தர்கள் கவலைபோக்கிட அதிமுக ஆட்சியில் எழில்மிகு சுவாமி சிலைகளுடன் விசாலமான மலைப்பாதை அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 3 வருடங்களில் மட்டும் மூன்று முறை இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெற்று பக்தர்களை அச்சம் கொள்ள செய்திருக்கிறது.

சிரமேற்கொண்டு அமைக்கப்பட்ட மலைப்பாதையை தமிழக அரசு முறையாக பாதுகாக்க தவறியது கவலையளிக்கிறது. இனியாவது, இதுபோன்ற சம்பவம் நிகழாத வகையில் பாதுகாப்பை பலப்படுத்தி, கோவிலைச் சுற்றி ரோந்து பணிகளை காவல்துறை துரிதப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}