சென்னை: பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சாதித்துள்ளார் என்ற வயிற்றெரிச்சலில் உள்ளார் எடப்பாடி பழனிசாமி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இன்று இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட்டேன்.
கல்வியும் மருத்துவமும் தான் திராவிட மாடல் அரசின் இரண்டு கண்கள். ஏற்றத் தாழ்வற்ற சமூகத்தை கட்டமைப்பதை அரசு கொள்கையாக வைத்துள்ளது. தமிழகத்தில் 2021 முதல் தற்போது வரை 17.74 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. தென்குமரியில் இருந்து சென்னை வரைக்கும் சமச்சீர் வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திட்டங்களை பார்த்து பார்த்து செய்து வருகிறோம்.

வளர்ச்சி என்பது பொருளாதார அடிப்படையில் தான். அறிவு ஜீவிபோல் அறிக்கை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. மோடியால் முடியாததை ஸ்டாலின் சாதிக்கிறார் என்பதே அவர்களுக்கு வயிற்றெரிச்சல். இதை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சித் தலைவர், நண்பருடன் இணைந்து பேசுகிறார் என்று தெரிவித்தார்.
ஜனநாயகக் கடமையாற்ற வேண்டிய நாள்.. உங்கள் வாக்கை தவறாமல் பதிவு செய்யுங்கள்!
யாசகத்தோழி!
வெளியில் புன்னகைத்து.. உள்ளுக்குள் கனன்றுகொண்டிருக்கும்.. நெருப்புக் குழம்பிற்குச் சொந்தக்காரி!
பஹல்காம் பரிதாபம்.. சிந்தூரைப் பார்த்து சினம் கொண்டவனை சிந்தூர் சாய்த்தது!
சிந்தனைச் சிதறல்.. ஒருவருக்கு தவறெனத் தோன்றுவது மற்றவருக்கு சரியெனத் தோன்றுகிறது!
Fermented rice: பழைய சோறு.. வெயில் வந்தாலே.. இதுவும் நம்மை நாடி வந்து விடும்!
Housewives எல்லாம் சும்மா இல்லைங்க.. அவர்கள் பாராட்டப்படாத உழைப்பாளிகள்!
Deepa Ravi Poem: உன் அருகில் நான் அமர்ந்தால்.. என் மனமோ!
World Earth Day: உயிர்க்கோளம் பூமி .. இறைவன் நமக்கு கொடுத்த வரம்!
{{comments.comment}}