சென்னை: பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சாதித்துள்ளார் என்ற வயிற்றெரிச்சலில் உள்ளார் எடப்பாடி பழனிசாமி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இன்று இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட்டேன்.
கல்வியும் மருத்துவமும் தான் திராவிட மாடல் அரசின் இரண்டு கண்கள். ஏற்றத் தாழ்வற்ற சமூகத்தை கட்டமைப்பதை அரசு கொள்கையாக வைத்துள்ளது. தமிழகத்தில் 2021 முதல் தற்போது வரை 17.74 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. தென்குமரியில் இருந்து சென்னை வரைக்கும் சமச்சீர் வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திட்டங்களை பார்த்து பார்த்து செய்து வருகிறோம்.

வளர்ச்சி என்பது பொருளாதார அடிப்படையில் தான். அறிவு ஜீவிபோல் அறிக்கை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. மோடியால் முடியாததை ஸ்டாலின் சாதிக்கிறார் என்பதே அவர்களுக்கு வயிற்றெரிச்சல். இதை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சித் தலைவர், நண்பருடன் இணைந்து பேசுகிறார் என்று தெரிவித்தார்.
உலகின் நம்பிக்கை நட்சத்திரம் நீ .. மா தவம் செய்து பெண்ணாய் பிறந்த நீ!
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!
பிறந்த நாள் ஒவ்வொரு உயிரின் வெற்றி நாள்!
பாதிப்புக்குள்ளாகும் பிற பெண்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டாமா.. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்
குவைத் விமான நிலையத்தைக் குறி வைத்த ஈரான்.. எரிபொருள் டேங்கர்கள் பெரும் சேதம்
இன்னும் அபிஷேக் சர்மா திருந்தவே இல்லையே.. சுனில் கவாஸ்கருக்கு வருத்தம்ப்பா!
ஆளப்பிறந்தவள்!
பெண்கள் ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல.. தினமும் பாராட்டப்பட வேண்டியவர்கள்!
மண்ணின் மகத்துவம்.. பெண்ணே நீ தனித்துவம்!
{{comments.comment}}