சென்னை: பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சாதித்துள்ளார் என்ற வயிற்றெரிச்சலில் உள்ளார் எடப்பாடி பழனிசாமி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இன்று இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட்டேன்.
கல்வியும் மருத்துவமும் தான் திராவிட மாடல் அரசின் இரண்டு கண்கள். ஏற்றத் தாழ்வற்ற சமூகத்தை கட்டமைப்பதை அரசு கொள்கையாக வைத்துள்ளது. தமிழகத்தில் 2021 முதல் தற்போது வரை 17.74 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. தென்குமரியில் இருந்து சென்னை வரைக்கும் சமச்சீர் வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திட்டங்களை பார்த்து பார்த்து செய்து வருகிறோம்.

வளர்ச்சி என்பது பொருளாதார அடிப்படையில் தான். அறிவு ஜீவிபோல் அறிக்கை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. மோடியால் முடியாததை ஸ்டாலின் சாதிக்கிறார் என்பதே அவர்களுக்கு வயிற்றெரிச்சல். இதை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சித் தலைவர், நண்பருடன் இணைந்து பேசுகிறார் என்று தெரிவித்தார்.
தூக்கி எறியப்பட்ட என்னை அரவணைத்து, அன்பு செலுத்தியவர் விஜய்: செங்கோட்டையன் ஓபன் டாக்!
முழு மனதோடு என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறேன்...தினகரன் அதிரடி
கூட்டணி குறித்து தற்போது வரை பாஜகவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை: பிரேமலதா விஜயகாந்த்!
தேஜகூவைத் தேடி அடித்துப் பிடித்து ஓடி வரும் கட்சிகள்.. அடுத்து யாரு தேமுதிகவா?
அதிமுக-பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல்.. அதில் ஏறுவோரும் மூழ்கடிக்கப்படுவார்கள்: செல்வப்பெருந்தகை
கடலோர தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!
முதல் பேச்சிலேயே தமிழ்நாட்டைத் தொட்ட பாஜக தலைவர் நிதின் நபின்.. திட்டம் என்ன?
தமிழகப் பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு: 2 நாட்களுக்கு Citizen Portal இணையதளம் செயல்படாது!
தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன்... அன்புடன் வரவேற்ற எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}