- இந்துமதி
ஹைதராபாத்: இயக்குநர் ஷங்கர், நடிகர் ராம்சரண் உள்ளிட்டோர் தயாரிப்பாளரும், ராமோஜி குழுமத்தின் அதிபருமான ராமோஜி ராவ் மறைவுக்கு படப்பிடிப்புத் தளத்தில் மெளன அஞ்சலி செலுத்தினர்.
ஈநாடு ஊடகத்தின் நிறுவனரும், தொழிலதிபரும், படத் தயாரிப்பாளருமான ராமோஜிராவ் இன்று அதிகாலை ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு 87 வயதாகிறது. தென்னிந்தியாவின் முக்கிய தொழில் முனைவோரில் அவரும் முக்கியமானவர்.
கடந்து சில மாதங்களாக உடல்நிலை குறைவு காரணமாக ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உடல்நிலை மோசமானதால் வென்டிலேட்டர் வைக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை அவர் மரணமடைந்தார்.
ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டி நிறுவியவரும் இவரே. பாகுபலி, புஷ்பா போன்ற பல படங்கள் இங்கு எடுக்கப்பட்டன. இந்நிலையில் இவருடைய மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் கேம் சேஞ்சர் படக் குழுவினர் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தபோது, மறைவுச் செய்தி வந்தது. இதையடுத்து படப்பிடிப்புத் தளத்திலேயே ராமோஜி ராஜவ் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இயக்குநர் ஷங்கர், நடிகர் ராம் சரண் உள்ளிட்டோர் மெளன அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தனர்.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}