- இந்துமதி
ஹைதராபாத்: இயக்குநர் ஷங்கர், நடிகர் ராம்சரண் உள்ளிட்டோர் தயாரிப்பாளரும், ராமோஜி குழுமத்தின் அதிபருமான ராமோஜி ராவ் மறைவுக்கு படப்பிடிப்புத் தளத்தில் மெளன அஞ்சலி செலுத்தினர்.
ஈநாடு ஊடகத்தின் நிறுவனரும், தொழிலதிபரும், படத் தயாரிப்பாளருமான ராமோஜிராவ் இன்று அதிகாலை ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு 87 வயதாகிறது. தென்னிந்தியாவின் முக்கிய தொழில் முனைவோரில் அவரும் முக்கியமானவர்.

கடந்து சில மாதங்களாக உடல்நிலை குறைவு காரணமாக ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உடல்நிலை மோசமானதால் வென்டிலேட்டர் வைக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை அவர் மரணமடைந்தார்.
ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டி நிறுவியவரும் இவரே. பாகுபலி, புஷ்பா போன்ற பல படங்கள் இங்கு எடுக்கப்பட்டன. இந்நிலையில் இவருடைய மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் கேம் சேஞ்சர் படக் குழுவினர் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தபோது, மறைவுச் செய்தி வந்தது. இதையடுத்து படப்பிடிப்புத் தளத்திலேயே ராமோஜி ராஜவ் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இயக்குநர் ஷங்கர், நடிகர் ராம் சரண் உள்ளிட்டோர் மெளன அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தனர்.
பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி
ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
தஞ்சையில் திருமுறை இசை வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 7-ல் கோலாகலமாக நடைபெறுகிறது!
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே தாக்கல்
டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி
{{comments.comment}}