விஜயவாடா : டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் 2025ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியன்று ரிலீசாக உள்ளது. பட ரிலீசை முன்னிட்டு ராம் சரணுக்காக படக்குழு செய்துள்ள காரியம் இந்திய அளவில் புதிய சாதனையே படைத்துள்ளது.
ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுள்ள படம் கேம் சேஞ்சர். இந்த படம் அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் படமாக தெலுங்கில் உருவாக்கப்பட்டுள்ளது. ஷங்கர் தெலுங்கில் இயக்கும் முதல் படம் இதுவாகும். இந்த படத்திற்கு டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதி உள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. ரூ.450 கோடி பட்ஜெட்டில், தமன் இசையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ரிலீசை முன்னிட்டு விஜயவாடாவில் படத்தின் ஹீரோ ராம் சரணுக்கு 256 உயரத்திற்கு மெகா கட்அவுட் வைத்துள்ளார்கள் படக்குழுவினர். இன்றைய தேதியில் இந்தியாவின் மிக உயரமான கட்அவுட் இது தானாம். இந்த கட்அவுட்டை தயாரிப்பாளர் தில் ராஜூ திறந்து வைத்துள்ளனர். இந்தியாவில் வேறு எந்த ஹீரோவிற்கும் இவ்வளவு உயரமாக கட்அவுட் வைத்தது கிடையாது. இந்த கட்அவுட் திறப்பு விழாவில் ராம் சரணின் ரசிகர்கள் பலரும் வந்திருந்தனர்.
இந்த மெகா கட்அவுட்டை காணவும், இதை போட்டோ எடுப்பதற்காகவும் ஏராளமான ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த படம் வெற்றி அடைய பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். சோஷியல் மீடியாவிலும் இந்த மெகா கட்அவுட் தொடர்பான போட்டோக்கள் செம வைரலாகி வருகின்றன. இது கட்அவுட்டின் உயரம் கிடையாது, ராம் சரண் மீது தாங்கள் வைத்துள்ள அன்பின் அடையாளம் என ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.
வழக்கமாக டைரக்டர் ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டம் இருக்கும். ஆனால் கேம் சேஞ்சர் படத்திற்கு படம் ரிலீசாவதற்கு முன்பு கட்அவுட்டிலேயே பிரம்மாண்டத்தை காட்ட துவங்கி விட்டார்கள். ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் பல சர்ச்சைகளும் குவிந்து கொண்டிருக்கும் சமயத்தில் மற்றொரு புறம் கொண்டாட்டங்களும் களைகட்ட துவங்கி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}