வாஷிங்டன்: பூமியை நோக்கி அபோபிஸ் என்ற விண்கல் வேகமாக நகர்ந்து வருகிறது. இது பூமியை தாக்கவும் வாய்ப்புண்டு என நாசா தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் விண்கற்களால் ஆபத்து அதிகம் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பல விண்கற்கள் இருந்தாலும், ஒரு சில விண்கற்களால் மட்டுமே பூமிக்கு ஆபத்து அதிகம். இந்த நிலையில் அபோபிஸ் எனும் விண்கல் 2029ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பூமிக்கு மிக அருகில் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

இந்த விண்கல் கடந்த 2004ம் ஆண்டு தான் கண்டுபிடிக்கப்பட்டது. அபோபிஸ் விண்கல் 2029ம் ஆண்டில் பூமிக்கு மிக அருகில் வர உள்ளதால் இது பூமியை தாக்கும் என்றும் ஒரு சில நேரங்களில் தாக்காமலும் செல்ல வாய்ப்பு உள்ளதாக நாசா கணித்துள்ளது. இது பூமியை தாக்கினால் 3 கிலோ மீட்டர் ஆழத்தில், 10 கிலோ மீட்டர் அகலத்தில் ஒரு பெரிய பள்ளம் ஏற்படும்.
இந்த கல் விழுந்த இடத்தில் 10 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உருவாகும். இந்த கல் விழும் 320 கிலோமீட்டர் பரப்பளவிற்கு எந்த கட்டிடமும் இருக்க வாய்ப்பில்லையாம். எல்லாம் காலியாகி விடுமாம். விண்கல் விழுந்த இடத்தில் லட்சக்கணக்கில் மக்கள் இறப்பார்கள் என்றும், கோடிக்கணக்கான மக்கள் படுகாயம் அடைவார்கள் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
இதனால் பல நாடுகளில் பொருளாதார நிலை கடுமையாக பாதிக்ககூடும், இது உலக அளவில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அந்த விண்கல் பூமியை தாக்குவதற்கான வாய்ப்பு குறைவு என்ற நம்பிக்கையையும் நாசா வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!
தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!
ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு
தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்
பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!
அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!
{{comments.comment}}