142 பேர் டிஸ்மிஸ்.. மைக்ரோசாப்ட்டின் கிட்ஹப் கொடுத்த அதிர்ச்சிப் "பரிசு"!

Mar 30, 2023,03:02 PM IST
பெங்களூரு:  மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான கிட்ஹப் நிறுவனத்தின் இந்திய கிளைகளில் பணியாற்றி வந்த 142 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். என்ஜீனியரிங் பிரிவைச் சேர்ந்த அத்தனை பணியாளர்களையும் அந்த நிறுவனம் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி அலுவலகங்களில் இவர்கள் பணியாற்றி வந்தனறர்.  நிறுவனத்தை சீரமைக்கும் நோக்கில் இந்த ஆட்குறைப்பு நடந்திருப்பதாக கிட்ஹப் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.



கடந்த பிப்ரவரி மாதம் இந்த சீரமைப்புத் திட்டம் தொடங்கப்பட்டதாகவும், நிறுவனத்தை சிறப்பாக நடத்த ஆட்குறைப்பு அவசியம் என்றும் அவர் விளக்கியுள்ளார்.  இந்தியாவில் ஒரு கோடி டெவலப்பர்களுக்கு கிட்ஹப் நிறுவனம் சேவையாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம்தான் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.  கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி கிட்ஹப் நிறுவனத்தை 7.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலைக்கு வாங்கி கையகப்படுத்தியது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்