142 பேர் டிஸ்மிஸ்.. மைக்ரோசாப்ட்டின் கிட்ஹப் கொடுத்த அதிர்ச்சிப் "பரிசு"!

Mar 30, 2023,03:02 PM IST
பெங்களூரு:  மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான கிட்ஹப் நிறுவனத்தின் இந்திய கிளைகளில் பணியாற்றி வந்த 142 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். என்ஜீனியரிங் பிரிவைச் சேர்ந்த அத்தனை பணியாளர்களையும் அந்த நிறுவனம் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி அலுவலகங்களில் இவர்கள் பணியாற்றி வந்தனறர்.  நிறுவனத்தை சீரமைக்கும் நோக்கில் இந்த ஆட்குறைப்பு நடந்திருப்பதாக கிட்ஹப் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.



கடந்த பிப்ரவரி மாதம் இந்த சீரமைப்புத் திட்டம் தொடங்கப்பட்டதாகவும், நிறுவனத்தை சிறப்பாக நடத்த ஆட்குறைப்பு அவசியம் என்றும் அவர் விளக்கியுள்ளார்.  இந்தியாவில் ஒரு கோடி டெவலப்பர்களுக்கு கிட்ஹப் நிறுவனம் சேவையாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம்தான் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.  கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி கிட்ஹப் நிறுவனத்தை 7.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலைக்கு வாங்கி கையகப்படுத்தியது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

சமீபத்திய செய்திகள்

news

தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு

news

KG முதல் PG வரை இலவச கல்வி.. ஒடிசா அதிரடியை எல்லோரும் கடைப்பிடிக்கலாமே?

news

தவெக.,வை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்... பலமா? பலவீனமா?

news

டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

news

Vijay Birthday: முதல்வராக முதல் முறையாக.. 52வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் விஜய்

news

அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலி: மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

news

பாஜவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி

news

லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?

news

Seven Days, Twenty Kilometres.. மற்றும் மறக்க முடியாத சில நினைவுகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்