142 பேர் டிஸ்மிஸ்.. மைக்ரோசாப்ட்டின் கிட்ஹப் கொடுத்த அதிர்ச்சிப் "பரிசு"!

Mar 30, 2023,03:02 PM IST
பெங்களூரு:  மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான கிட்ஹப் நிறுவனத்தின் இந்திய கிளைகளில் பணியாற்றி வந்த 142 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். என்ஜீனியரிங் பிரிவைச் சேர்ந்த அத்தனை பணியாளர்களையும் அந்த நிறுவனம் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி அலுவலகங்களில் இவர்கள் பணியாற்றி வந்தனறர்.  நிறுவனத்தை சீரமைக்கும் நோக்கில் இந்த ஆட்குறைப்பு நடந்திருப்பதாக கிட்ஹப் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.



கடந்த பிப்ரவரி மாதம் இந்த சீரமைப்புத் திட்டம் தொடங்கப்பட்டதாகவும், நிறுவனத்தை சிறப்பாக நடத்த ஆட்குறைப்பு அவசியம் என்றும் அவர் விளக்கியுள்ளார்.  இந்தியாவில் ஒரு கோடி டெவலப்பர்களுக்கு கிட்ஹப் நிறுவனம் சேவையாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம்தான் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.  கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி கிட்ஹப் நிறுவனத்தை 7.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலைக்கு வாங்கி கையகப்படுத்தியது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்