142 பேர் டிஸ்மிஸ்.. மைக்ரோசாப்ட்டின் கிட்ஹப் கொடுத்த அதிர்ச்சிப் "பரிசு"!

Mar 30, 2023,03:02 PM IST
பெங்களூரு:  மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான கிட்ஹப் நிறுவனத்தின் இந்திய கிளைகளில் பணியாற்றி வந்த 142 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். என்ஜீனியரிங் பிரிவைச் சேர்ந்த அத்தனை பணியாளர்களையும் அந்த நிறுவனம் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி அலுவலகங்களில் இவர்கள் பணியாற்றி வந்தனறர்.  நிறுவனத்தை சீரமைக்கும் நோக்கில் இந்த ஆட்குறைப்பு நடந்திருப்பதாக கிட்ஹப் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.



கடந்த பிப்ரவரி மாதம் இந்த சீரமைப்புத் திட்டம் தொடங்கப்பட்டதாகவும், நிறுவனத்தை சிறப்பாக நடத்த ஆட்குறைப்பு அவசியம் என்றும் அவர் விளக்கியுள்ளார்.  இந்தியாவில் ஒரு கோடி டெவலப்பர்களுக்கு கிட்ஹப் நிறுவனம் சேவையாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம்தான் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.  கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி கிட்ஹப் நிறுவனத்தை 7.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலைக்கு வாங்கி கையகப்படுத்தியது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

சமீபத்திய செய்திகள்

news

துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)

news

விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?

news

meenakshi thirukalyanam 2026 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் 2026 கோலாகலம்

news

தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்

news

புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது

news

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு

news

புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு

news

இதயம் என்னும் கவிதை...!

news

குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!

அதிகம் பார்க்கும் செய்திகள்