இன்று அட்சயதிரிதியை.. தங்கம் விலை சர்ருன்னு குறைஞ்சிருச்சு தேவி!

Apr 22, 2023,11:26 AM IST
சென்னை : இன்று அட்சய திரிதியை நாள் என்பதால் தங்கம் வாங்குவதற்காக நகைக்கடைகளில் மக்கள் கூடி உள்ளனர். இந்த சமயத்தில் மக்களின் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும் விதமாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கி வீட்டில் சேமித்து வைத்தால், தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும். செல்வ வளம் பெரும் என்பது நம்பிக்கை. ஆனால் அட்சய திரிதியை நாளில் எந்த காரியத்தை செய்தாலும் அதன் பலன் பல மடங்காக பெருகும். இது தெரியாமல் பலரும் கடன் வாங்கியாவது இந்த நாளில் தங்கம் வாங்கி விட வேண்டும் என நினைக்கிறார்கள். இந்த நாளில் கடனை அடைக்கலாமே தவிர, கடன் வாங்கினால் கடனும் பெருகிக் கொண்டே போகும்.




அட்சய திரிதியை நாள் என்பதால் தங்கம் வாங்குவதற்காக ஏராளமான மக்கள் இன்று நகைக்கடைகளில் குவிந்துள்ளனர். ரம்ஜான் விடுமுறை என்பதால் நகைக்கடைகளுக்கு வழக்கமான அட்சய திரிதியை நாட்களில் வரும் கூட்டத்தை விட இந்த ஆண்டு சற்று அதிகமாகவே காணப்படுவதாக நகைக்கைடக்காரர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நகைக்கடைகளுக்கு வந்த மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

வழக்கமாக அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை உயரத்தான் செய்யும். இருந்தாலும் சென்டிமென்ட் காரணமாக மக்கள் தங்கம் வாங்குவதால் ஆண்டுக்கு ஆண்டு தங்கம் விற்பனை அதிகரித்து வருகிறது. தங்கம் விற்பனை அதிகரிப்பதால் வழக்கமாக நகைக்கடைக்காரர்கள் தான் மகிழ்ச்சியில் இருப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு தங்கம் வாங்கும் மக்களும் மகிழ்ச்சியடையும் விதமாக தங்கம் விலை குறைந்துள்ளது.

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.60 குறைந்து, ரூ.5605 ஆக உள்ளது. இதனால் மக்கள் செம குஷியாக நகையை வாங்கி செல்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்