வீரர்களின் கனவு நனவானது... ஜல்லிக்கட்டை தூக்கி சாப்பிட்ட முதலவர் முக ஸ்டாலினின் 2 அறிவிப்புக்கள்!

Jan 17, 2026,06:16 PM IST

மதுரை:  முதல்வர் மு.க.ஸ்டலின் வெளியிட்ட 2 அறிவிப்புகளால் ஜல்லிக்கட்டு வீரர்களின் நெடுநாள்  கனவு இன்று நினவாகியுள்ளது.


 மாட்டுப் பொங்கல் பண்டிகையை ஒட்டி, மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அலங்காநல்லூருக்கு வருகை தந்தார். அப்போது, ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெறும் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு மக்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஜல்லிக்கட்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அரசு வேலை என்ற அறிவிப்பு மூலம், இது கால்பந்து, தடகளம் (Athletics) போன்ற அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பிரிவுகளின் (Sports Quota) வரிசையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. இது வீரர்களுக்கு ஒரு தொழில்முறை கௌரவத்தை அளிக்கிறது.




ஜல்லிக்கட்டு வீரர்கள் பெரும்பாலும் கிராமப்புற பின்னணியைச் சேர்ந்த உழைக்கும் வர்க்கத்தினர். போட்டிகளின் போது காயம் அடைந்தாலோ அல்லது வயதான காலத்திலோ அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் சூழல் இருந்து வந்தது.இந்நிலையில் அரசு வேலை என்பது அவர்களின் குடும்பத்திற்கு ஒரு நிரந்தர வருமானத்தையும் சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. மாடுபிடி வீரர்களுக்குக் கால்நடை பராமரிப்புத் துறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் அறிவுப்பூர்வமானது. மாடுகளின் உடலமைப்பு, அதன் குணம் மற்றும் பராமரிப்பு குறித்து நன்கு அறிந்த வீரர்களை அதே துறையில் பணியமர்த்துவது அத்துறையின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும்.


ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் 'சிறந்த மாடுபிடி வீரராக'த் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு, கால்நடை பராமரிப்புத் துறையில் முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை கார், பைக், தங்கம் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 'அரசு வேலை' என்ற அறிவிப்பு வீரர்களின் எதிர்காலத்திற்குப் பெரிய பாதுகாப்பாக அமையும் என கருதப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

அஜா ஏகாதசி.. மகா விஷ்ணுவையும்.. மகாலட்சுமி தாயாரையும் நினைத்து விரதம் இருப்போம்!

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!

news

Motivational Monday: மாறுபடும் மதிப்புகளும் மதிப்பீடுகளும்.. சிறுகதை!

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்