வீரர்களின் கனவு நனவானது... ஜல்லிக்கட்டை தூக்கி சாப்பிட்ட முதலவர் முக ஸ்டாலினின் 2 அறிவிப்புக்கள்!

Jan 17, 2026,06:16 PM IST

மதுரை:  முதல்வர் மு.க.ஸ்டலின் வெளியிட்ட 2 அறிவிப்புகளால் ஜல்லிக்கட்டு வீரர்களின் நெடுநாள்  கனவு இன்று நினவாகியுள்ளது.


 மாட்டுப் பொங்கல் பண்டிகையை ஒட்டி, மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அலங்காநல்லூருக்கு வருகை தந்தார். அப்போது, ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெறும் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு மக்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஜல்லிக்கட்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அரசு வேலை என்ற அறிவிப்பு மூலம், இது கால்பந்து, தடகளம் (Athletics) போன்ற அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பிரிவுகளின் (Sports Quota) வரிசையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. இது வீரர்களுக்கு ஒரு தொழில்முறை கௌரவத்தை அளிக்கிறது.




ஜல்லிக்கட்டு வீரர்கள் பெரும்பாலும் கிராமப்புற பின்னணியைச் சேர்ந்த உழைக்கும் வர்க்கத்தினர். போட்டிகளின் போது காயம் அடைந்தாலோ அல்லது வயதான காலத்திலோ அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் சூழல் இருந்து வந்தது.இந்நிலையில் அரசு வேலை என்பது அவர்களின் குடும்பத்திற்கு ஒரு நிரந்தர வருமானத்தையும் சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. மாடுபிடி வீரர்களுக்குக் கால்நடை பராமரிப்புத் துறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் அறிவுப்பூர்வமானது. மாடுகளின் உடலமைப்பு, அதன் குணம் மற்றும் பராமரிப்பு குறித்து நன்கு அறிந்த வீரர்களை அதே துறையில் பணியமர்த்துவது அத்துறையின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும்.


ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் 'சிறந்த மாடுபிடி வீரராக'த் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு, கால்நடை பராமரிப்புத் துறையில் முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை கார், பைக், தங்கம் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 'அரசு வேலை' என்ற அறிவிப்பு வீரர்களின் எதிர்காலத்திற்குப் பெரிய பாதுகாப்பாக அமையும் என கருதப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்