- கவிதா உடையப்பன், சேலம்
ஐயாவினால் வந்ததெங்கள் விலாசம்
அப்பத்தாவினால் வளர்ந்ததெங்கள் பந்தபாசம்
வந்ததும் வளர்ந்ததும் எங்கள் குலத்தை முன்னிறுத்த
அவர் பெயரிட்ட பேத்தி நான் இங்கு உறைக்க
அப்பத்தா பொறுப்பேற்று வீட்டைப் பராமரிக்க
ஐயா நாட்டிற்கும் நல்வீட்டிற்கும் பெருமை சேர்த்தார்
எதனையும் கலந்து பேசியே முடிவெடுப்பர்
இருவரும் தம் துணைவர் பேச்சையே முன்மொழிவர்
சிக்கனத்தையே கடை பிடிப்பார்
அப்பத்தா சிந்தித்து தான் பேசுவார்
புத்தியுடனே செயல் ஆற்றுவார்
ஐயா இந்த புவனத்தையே ஈட்டுவார்
வேட்டியும் வேர்வை பூத்த சட்டையும்
விளக்கியது ஐயாவின் உழைப்பை
சுங்குடிச்சேலையும் சிவப்பு ரவிக்கையும்
உணர்த்தியது அப்பத்தாவின் பொறுமையை

வாழ்வின் நெளிவு சுளிவுகளை, அப்பத்தா
விடியற்காலையிலிடும் கோலம் முதல் கையாள்வார்
கடமைகளை நன்கு ஆற்றியபின், ஐயா
அந்திப்பொழுதில் சற்று கவி பாடுவார்
கண்ணாடியின்றி படித்த அப்பத்தாவின் கூர்மையென்ன !
மருந்தின்றி வாழ்ந்த ஐயாவின் மகத்துவமென்ன !
வேறு உதாரணமும் வேண்டுமோ ! வேர்களாய் இவர்களிருக்கையில் ;
எனக்கு நீங்களே இலக்கணம், உங்கள் வழி நடத்தலல்லாது மிளிருமோர் க்ஷணம் ?
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் கவிதா உடையப்பன் ரத்தினா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
Jai Shri Ram: ராம நாமத்தின் மகிமை!
வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!
பெயரளவிலான பெயர்கள்!
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
{{comments.comment}}