சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த வாரத்திற்கு முன்பு வரை பரவலாக மிதமான மழை பெய்து வந்தது. இதனால் வெயில் சற்று குறைந்து இதமான சூழ்நிலை நிலவியது. இதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை என முக்கிய நகரங்களில் வெயில் கொளுத்துவதால் மக்கள் புழுக்கத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ராஜஸ்தான் வரை சென்று வலுவிழக்க உள்ளது. இதனால் தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்ததை அடுத்து மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் தென் தமிழகத்தில் மழையின் அளவு குறைந்து அநேக இடங்களில் வறண்ட வானிலேயே நிலவி வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது.
தற்போது நிலவிவரும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அச்சப்பட்டு வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். தமிழகத்தில் நேற்று பல இடங்களில் வெயில் தாக்கம் அதிகரித்து சதம் அடித்துள்ளது. குறிப்பாக மதுரையில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் சுட்டெரித்தது. அதேபோல் சென்னையில் 102 பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தியது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.அப்போது அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
150 ஆண்டுகளில் செப்டம்பரில் 5வது முறையாக
கடந்த 150 ஆண்டுகளில், செப்டம்பர் மாதத்தில் இப்படி அதிக அளவில் வெயில் அடிப்பது இது ஐந்தாவது முறையாகும் என்று தகவல்கள் கூறுகின்றன. அதேசமயம், மேலும் மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 102 டிகிரி வரை வெளுக்கும்
தமிழ்நாட்டில் நாளையும் வெயில் சுட்டெரிக்கும். அப்போது ஒரு சில இடங்களில் இயல்பை விட 7 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும். குறிப்பாக சென்னையில் 102 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலையிலேயே சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் வெயில் கொளுத்துகிறது. கூடவே காற்றும் வீசுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}