- யோகா பேராசிரியை மு.மஞ்சரி
மரத்திற்கோ ஓர் அறிவு.
மனிதனுக்கோ ஆறறிவு.
மரம்போல் உயர்ந்த அளவிற்கு, மனிதன் உயரவில்லை
உயரத்தை விட்டு விடுங்கள் உள்ளத்தால், உயரலாமே.
மரம் வளர்ந்து, நிற்கும்போது, நில அரிப்பை தடுக்கும்.
நீர் வளத்தை பெருக்கும்.
காற்றின் மாசை குறைக்கும்.
மண்ணை மழையால் காக்கும்.
உழைப்போர்க்கு நிழலை தரும்.
பசித்தோர்க்கு, பழத்தை கொடுக்கும் .

ஓசோன் படலம் கிழிவதை, தடுக்கும்
புவி வெப்பத்தை குறைக்கும்
ஒவ்வொரு மரமும், ஒரு தொழில் கூடம்.
கரியமில வாயுவை, உட்கொள்ளும்.
சுவைக்கும். பிராணவாயுவை
வெளித்தள்ளும் புறம் தள்ளும்
உயிரின வாழ்விற்கு, மூச்சுக்காற்றாகும்.
மரம் வெட்டப்பட்டு, மரக்கட்டையாகும் போது கட்டில் ஆகும்.
குழந்தைக்கு தொட்டில் ஆகும்.
வீட்டுக்கு கதவாகும்.
வாசல் நிலையாகும்.
கோயில் தேராகும்.
கருவறையில் கடவுளாகும்.
இன்னும் என்னென்னவோ ஆகும்.
ஆனால் ஒவ்வொன்றும் என்றைக்கும் பல பயனளிக்கும்.
மரம் உயர்ந்த அளவிற்கு, மனிதன் உயரட்டும்.
உயரத்தை விட்டு விடுங்கள், உள்ளத்தால் உயரட்டும்.
இனி இப்படி ஒரு பிறவி வேண்டாம்.. பிறவியே வேண்டாம்!
தடம் மாறும் தமிழர் பண்பாடு!
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
எது தான் உண்மை..? .. சற்று யோசிப்போம்.. நிதானமாய் வாசிப்போம் .. Happy Housewife Day!
மீண்டும் ஏற்றம் கண்ட தங்கம், வெள்ளி விலை... சவரனுக்கு ரூ.320 உயர்வு!
{{comments.comment}}