- யோகா பேராசிரியை மு.மஞ்சரி
மரத்திற்கோ ஓர் அறிவு.
மனிதனுக்கோ ஆறறிவு.
மரம்போல் உயர்ந்த அளவிற்கு, மனிதன் உயரவில்லை
உயரத்தை விட்டு விடுங்கள் உள்ளத்தால், உயரலாமே.
மரம் வளர்ந்து, நிற்கும்போது, நில அரிப்பை தடுக்கும்.
நீர் வளத்தை பெருக்கும்.
காற்றின் மாசை குறைக்கும்.
மண்ணை மழையால் காக்கும்.
உழைப்போர்க்கு நிழலை தரும்.
பசித்தோர்க்கு, பழத்தை கொடுக்கும் .

ஓசோன் படலம் கிழிவதை, தடுக்கும்
புவி வெப்பத்தை குறைக்கும்
ஒவ்வொரு மரமும், ஒரு தொழில் கூடம்.
கரியமில வாயுவை, உட்கொள்ளும்.
சுவைக்கும். பிராணவாயுவை
வெளித்தள்ளும் புறம் தள்ளும்
உயிரின வாழ்விற்கு, மூச்சுக்காற்றாகும்.
மரம் வெட்டப்பட்டு, மரக்கட்டையாகும் போது கட்டில் ஆகும்.
குழந்தைக்கு தொட்டில் ஆகும்.
வீட்டுக்கு கதவாகும்.
வாசல் நிலையாகும்.
கோயில் தேராகும்.
கருவறையில் கடவுளாகும்.
இன்னும் என்னென்னவோ ஆகும்.
ஆனால் ஒவ்வொன்றும் என்றைக்கும் பல பயனளிக்கும்.
மரம் உயர்ந்த அளவிற்கு, மனிதன் உயரட்டும்.
உயரத்தை விட்டு விடுங்கள், உள்ளத்தால் உயரட்டும்.
காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி
பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா
சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்
பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்
"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு
தவெக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய இணையதளம்
தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு
{{comments.comment}}