மரம் போல் உயரட்டும் மனித இனம்!

Nov 03, 2025,10:08 AM IST

- யோகா பேராசிரியை மு.மஞ்சரி‌


மரத்திற்கோ ஓர் அறிவு. 

மனிதனுக்கோ ஆறறிவு. 

மரம்போல் உயர்ந்த அளவிற்கு, மனிதன் உயரவில்லை

உயரத்தை விட்டு விடுங்கள் உள்ளத்தால், உயரலாமே. 


மரம் வளர்ந்து, நிற்கும்போது, நில அரிப்பை தடுக்கும்.

நீர் வளத்தை பெருக்கும். 

காற்றின் மாசை குறைக்கும். 

மண்ணை மழையால் காக்கும். 

உழைப்போர்க்கு நிழலை தரும். 

பசித்தோர்க்கு, பழத்தை கொடுக்கும் .




ஓசோன் படலம் கிழிவதை, தடுக்கும்

புவி வெப்பத்தை குறைக்கும்

ஒவ்வொரு மரமும், ஒரு தொழில் கூடம். 

கரியமில வாயுவை, உட்கொள்ளும். 

சுவைக்கும். பிராணவாயுவை

வெளித்தள்ளும் புறம் தள்ளும்

உயிரின வாழ்விற்கு, மூச்சுக்காற்றாகும்.


மரம் வெட்டப்பட்டு, மரக்கட்டையாகும் போது கட்டில் ஆகும். 

குழந்தைக்கு தொட்டில் ஆகும். 

வீட்டுக்கு கதவாகும். 

வாசல் நிலையாகும். 

கோயில் தேராகும். 

கருவறையில் கடவுளாகும். 

இன்னும் என்னென்னவோ ஆகும்.


ஆனால் ஒவ்வொன்றும் என்றைக்கும் பல பயனளிக்கும். 

மரம் உயர்ந்த அளவிற்கு, மனிதன் உயரட்டும்.

உயரத்தை விட்டு விடுங்கள், உள்ளத்தால் உயரட்டும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...மாவட்ட வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்

news

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்

news

செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

news

திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி

news

அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!

news

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

news

விஜய் தான் களத்தில் இல்லை.. திடீரென வருகிறார்.. திடீரென காணாமல் போகிறார்: தமிழிசை செளந்தரராஜன்

news

ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்