மரம் போல் உயரட்டும் மனித இனம்!

Nov 03, 2025,10:08 AM IST

- யோகா பேராசிரியை மு.மஞ்சரி‌


மரத்திற்கோ ஓர் அறிவு. 

மனிதனுக்கோ ஆறறிவு. 

மரம்போல் உயர்ந்த அளவிற்கு, மனிதன் உயரவில்லை

உயரத்தை விட்டு விடுங்கள் உள்ளத்தால், உயரலாமே. 


மரம் வளர்ந்து, நிற்கும்போது, நில அரிப்பை தடுக்கும்.

நீர் வளத்தை பெருக்கும். 

காற்றின் மாசை குறைக்கும். 

மண்ணை மழையால் காக்கும். 

உழைப்போர்க்கு நிழலை தரும். 

பசித்தோர்க்கு, பழத்தை கொடுக்கும் .




ஓசோன் படலம் கிழிவதை, தடுக்கும்

புவி வெப்பத்தை குறைக்கும்

ஒவ்வொரு மரமும், ஒரு தொழில் கூடம். 

கரியமில வாயுவை, உட்கொள்ளும். 

சுவைக்கும். பிராணவாயுவை

வெளித்தள்ளும் புறம் தள்ளும்

உயிரின வாழ்விற்கு, மூச்சுக்காற்றாகும்.


மரம் வெட்டப்பட்டு, மரக்கட்டையாகும் போது கட்டில் ஆகும். 

குழந்தைக்கு தொட்டில் ஆகும். 

வீட்டுக்கு கதவாகும். 

வாசல் நிலையாகும். 

கோயில் தேராகும். 

கருவறையில் கடவுளாகும். 

இன்னும் என்னென்னவோ ஆகும்.


ஆனால் ஒவ்வொன்றும் என்றைக்கும் பல பயனளிக்கும். 

மரம் உயர்ந்த அளவிற்கு, மனிதன் உயரட்டும்.

உயரத்தை விட்டு விடுங்கள், உள்ளத்தால் உயரட்டும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இலவச ஃபிரிட்ஜ், தீபாவளிக்கு வேட்டி சேலை... அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

news

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தீவிரம் - இதுவரை 56 இடங்கள் ஒதுக்கீடு

news

திமுக கூட்டணியில் தேமுதிக.,வுக்கு எத்தனை தொகுதிகள்? இன்று இரவு முடிவாகிறது

news

அண்ணாமலை போட்டியிடும் தொகுதி எது? பியூஷ் கோயலுடன் முக்கிய சந்திப்பு

news

திமுக கூட்டணியில் விசிக.,விற்கு 8 இடங்கள் ஒதுக்கீடு

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை முதல் தேர்தல் பிரச்சாரம்...பயண விபரம் வெளியீடு

news

தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு அதிரடி கட்டுப்பாடு - தேர்தல் ஆணையம் உத்தரவு

news

தவிர்க்க முடியாத சிறுத்தைகள்.. தடதடக்கும் அரசியல் பாதை.. திரும்பிப் பார்க்க வைக்கும் திருமா

news

மனுதாக்கல் தொடங்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே.. முடிவுக்கு வருகிறதா திமுக தொகுதி பங்கீடு!

அதிகம் பார்க்கும் செய்திகள்