- ந. லட்சுமி
சென்னை: எங்கு பார்த்தாலும், மழை, பனியாக இருக்கிறது. யாரைக் கேட்டாலும் இருமல், சளி என்று புலம்புகிறார்கள்.. எதைச் சாப்பிட்டாலும் சளி போகலைன்னு கவலையும் இருக்கிறது.. என்ன செய்தாலும்.. அட இருங்க இருங்க.. லிஸ்ட்டு பெருசா போய்ட்டே இருக்கு.. இதுக்கெல்லாம் ஒரு சூப்பர் நிவாரணத்துடன்தான் வந்திருக்கோம்.
சளி இருமலைப் போக்க அருமையான குழம்பு இது.. அதுதான் மிளகு குழம்பு.. இதை வச்சுச் சாப்பிடுங்க, உடம்பு எப்படி சரியாகுதுன்னு மட்டும் பாருங்க.. வாங்க கிச்சனுக்குள் போகலாம்.
தேவையான பொருட்கள்:

மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி விதை – 2 டீஸ்பூன் கோபுரமாக
பூண்டு – 15-20 பல்( தோலுடனே கழுவி எடுத்துக் கொள்ளலாம் )
சின்ன வெங்காயம் – 6–8 (அல்லது பெரிய வெங்காயம் 1)
புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயம்- சிறிய கட்டி
தக்காளி பழம்- 3
காரம் வேண்டுமென்றால் காய்ந்த மிளகாய் - 2
தேங்காய் துருவல் - சிறிது
வெல்லக்கட்டி - சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிது
நல்ல எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவைக்கு ஏற்ப
செய்முறை:
1. மசாலா தயார் செய்ய:
மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை, பூண்டு, தேங்காய் துருவல், தக்காளி பழம் -1, பெருங்காயம், மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து வதக்கவும், பின் இவற்றை நன்றாக அரைக்கவும்.
2. புளி கரைசல்
புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
3. தாளிக்க
கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் போட்டு வெடிக்க விடவும். பின்னர் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், தக்காளி பழம் சேர்த்து வதக்கவும்.
4. குழம்பு செய்வது
அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது வதக்கவும். புளி கரைசல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
5. கொதிக்க விடவும். பிறகு மிதமான தீயில் 10–15 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியில் வெல்லக் கட்டி சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் இறக்கவும்.
தாளிப்பு:
சிறிது எண்ணெய் கடாயில் விட்டு கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொட்டவும்.
சூடாக சாப்பிடவும்
சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். சளி, இருமல், ஜீரணத்திற்கு நல்லது.
(ந. லட்சுமி, மன்னார்குடி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
மக்களே உஷார்...தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்: ஒரே நாளில் 1320 பேர் பாதிப்பு
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்
ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!
ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!
புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?
{{comments.comment}}