சென்னை: தெற்கு ரயில்வேயில் பயிற்சி பணியிடங்களுக்கான 2,438 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 12 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன.
நாட்டில் பலருக்கும் அரசு வேலையில் சேர வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருக்கும். அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு ரயில்வேயில் பணிபுரிய வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாகவே இருக்கும். இந்த நிலையில், ரயில்வேயில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அவ்வப்போது ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த வருடம் தெற்கு ரயில்வேயில் உள்ள 2,438 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி பெரம்பூரில் உள்ள கேரேஜ் ஒர்க்ஸில் 1337 பணியிடங்கள், மத்திய பணிமனை, திருச்சி பொன்மலையில் 379 பணியிடங்கள், சிக்னல் & டெலிகாம் பணிமனை, கோவை போதனூரில் 722 பணியிடங்கள் என மொத்தம் 2,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை வரவேற்கப்பட உள்ளன.

கல்வித்தகுதி என்ன..?
தெற்கு ரயில்வேயில் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் ஐடிஐ, 10 அல்லது 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் 24 வயதிற்குள் உள்ளவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். அதேபோல அனுபவம் இல்லாதவர்கள் என்றால் 22 வயதை அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள் https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!
எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)
2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!
செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
{{comments.comment}}