சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை முடிந்து தற்போது பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்நிலையில் தென்னிந்திய கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 28ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் உறைப்பனி ஏற்பட வாய்ப்புப்ள்ளது.
சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் அதிகாலை வேளையில் நகரின் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.

மழைக்காலம் முடிந்து தற்போது பனிக் காலம் நடந்து வருகிறது. இது முடிந்ததும் காத்திருக்கிறது சூப்பரான வெயில் காலம். இப்போதெல்லாம் எது வந்தாலும் ரொம்பவும் உக்கிரமாகத்தான் இருக்கிறது. மழைக்காலத்தில் நாம பட்ட பாட்டை எல்லோரும் மறந்திருக்க முடியாது. எனவே இந்த வருடம் வெயில் காலமும் சிறப்பாகவே இருக்கும் என்று மக்கள் அச்சத்துடன் காத்துள்ளனர்.
அடிக்கப் போற வெயிலை நினைச்சா இப்பவே கண்ணு வேர்க்குதே என்று சொல்லாத குறையாக மக்கள் வியர்த்து விறுவிறுத்துப் போய்க் காத்துள்ளனர்.. பரவாயில்லை மிஸ்டர் வெயில்.. நீங்க எவ்வளவு அடிச்சாலும் நாங்க நல்லாவே தாங்குவோம்.. வர்லாம் வர்லாம்!
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}