சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை முடிந்து தற்போது பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்நிலையில் தென்னிந்திய கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 28ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் உறைப்பனி ஏற்பட வாய்ப்புப்ள்ளது.
சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் அதிகாலை வேளையில் நகரின் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.

மழைக்காலம் முடிந்து தற்போது பனிக் காலம் நடந்து வருகிறது. இது முடிந்ததும் காத்திருக்கிறது சூப்பரான வெயில் காலம். இப்போதெல்லாம் எது வந்தாலும் ரொம்பவும் உக்கிரமாகத்தான் இருக்கிறது. மழைக்காலத்தில் நாம பட்ட பாட்டை எல்லோரும் மறந்திருக்க முடியாது. எனவே இந்த வருடம் வெயில் காலமும் சிறப்பாகவே இருக்கும் என்று மக்கள் அச்சத்துடன் காத்துள்ளனர்.
அடிக்கப் போற வெயிலை நினைச்சா இப்பவே கண்ணு வேர்க்குதே என்று சொல்லாத குறையாக மக்கள் வியர்த்து விறுவிறுத்துப் போய்க் காத்துள்ளனர்.. பரவாயில்லை மிஸ்டர் வெயில்.. நீங்க எவ்வளவு அடிச்சாலும் நாங்க நல்லாவே தாங்குவோம்.. வர்லாம் வர்லாம்!
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}