Weather Report: இன்னும் ஒரு வாரத்திற்கு.. வறண்ட வானிலேயே நிலவும்.. மண்டை காயப் போகுது!

Jan 22, 2024,06:58 PM IST

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வடகிழக்கு பருவமழை முடிந்து தற்போது பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்நிலையில் தென்னிந்திய கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 28ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் உறைப்பனி ஏற்பட வாய்ப்புப்ள்ளது.


சென்னையை  பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி  நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் அதிகாலை வேளையில் நகரின் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும்  அறிவித்துள்ளது.




மழைக்காலம் முடிந்து தற்போது பனிக் காலம் நடந்து வருகிறது. இது முடிந்ததும் காத்திருக்கிறது சூப்பரான வெயில் காலம். இப்போதெல்லாம் எது வந்தாலும் ரொம்பவும் உக்கிரமாகத்தான் இருக்கிறது. மழைக்காலத்தில் நாம பட்ட பாட்டை எல்லோரும் மறந்திருக்க முடியாது. எனவே இந்த வருடம் வெயில் காலமும் சிறப்பாகவே இருக்கும் என்று மக்கள் அச்சத்துடன் காத்துள்ளனர்.


அடிக்கப் போற வெயிலை நினைச்சா இப்பவே கண்ணு வேர்க்குதே என்று சொல்லாத குறையாக மக்கள் வியர்த்து விறுவிறுத்துப் போய்க் காத்துள்ளனர்.. பரவாயில்லை மிஸ்டர் வெயில்.. நீங்க எவ்வளவு அடிச்சாலும் நாங்க நல்லாவே தாங்குவோம்.. வர்லாம் வர்லாம்!

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்