கடலூர்: தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டங்களில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று கிராமங்களில், கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தக் கூட்டங்களில் குடிநீர்ப் பிரச்சினை மதுக் கடை பிரச்சினை, பல்வேறு கிராம கோரிக்கைகள் தொடர்பாக விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. கிராம ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றியம் தெம்மூர் ஊராட்சியில் 78 சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது . இதையொட்டி கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் தெம்மூர் ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து செயலர் பூவராகன், திட்ட ஒருங்கிணைப்பாளர் இந்திரா, பணித்தள பொறுப்பாளர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு

இதேபோல கீழ்விசிரி கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் முழு மது விலக்கை அமல்படுத்தக் கோரி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கீழ்விசிரி கிராமம், டாக்டர் ராமதாஸின் தாய் வழி பூர்வீக கிராமமாகும்.
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
SIR 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
திமுக எதிர்ப்பு .. இது மட்டும் போதுமா அதிமுக வெற்றி பெற.. எங்கேயே இடிக்குதே!
{{comments.comment}}