கடலூர்: தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டங்களில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று கிராமங்களில், கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தக் கூட்டங்களில் குடிநீர்ப் பிரச்சினை மதுக் கடை பிரச்சினை, பல்வேறு கிராம கோரிக்கைகள் தொடர்பாக விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. கிராம ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றியம் தெம்மூர் ஊராட்சியில் 78 சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது . இதையொட்டி கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் தெம்மூர் ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து செயலர் பூவராகன், திட்ட ஒருங்கிணைப்பாளர் இந்திரா, பணித்தள பொறுப்பாளர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு

இதேபோல கீழ்விசிரி கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் முழு மது விலக்கை அமல்படுத்தக் கோரி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கீழ்விசிரி கிராமம், டாக்டர் ராமதாஸின் தாய் வழி பூர்வீக கிராமமாகும்.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன்.. ரூ. 3000 ரொக்கமும் தரப்படும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
TAPS: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கொடுத்த ஹேப்பி நியூஸ்.. அறிக்கையின் முழு விவரம்!
I am Coming.. திரும்பி போற ஐடியாவே இல்ல.. விஜய்யின் ஜனநாயகன் பட டிரைலர் எப்படி இருக்கு?
வெனிசுலா அதிபர் சிறைபிடிக்கப்பட்டு, நாடு கடத்தல்...டிரெம்ப் அறிவிப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்...முதல்வர் அறிவிப்பு
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லத் தயாரா?... 150 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல்? நிர்மலா சீதாராமன் படைக்கப்போகும் புதிய சாதனை
காவல்துறையினர் மரியாதை, புன்னகை, அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
திமுக தேர்தல் அறிக்கை: மொபைல் செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}