கடலூர்: தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டங்களில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று கிராமங்களில், கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தக் கூட்டங்களில் குடிநீர்ப் பிரச்சினை மதுக் கடை பிரச்சினை, பல்வேறு கிராம கோரிக்கைகள் தொடர்பாக விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. கிராம ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றியம் தெம்மூர் ஊராட்சியில் 78 சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது . இதையொட்டி கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் தெம்மூர் ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து செயலர் பூவராகன், திட்ட ஒருங்கிணைப்பாளர் இந்திரா, பணித்தள பொறுப்பாளர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு

இதேபோல கீழ்விசிரி கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் முழு மது விலக்கை அமல்படுத்தக் கோரி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கீழ்விசிரி கிராமம், டாக்டர் ராமதாஸின் தாய் வழி பூர்வீக கிராமமாகும்.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}