கடலூர்: தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டங்களில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று கிராமங்களில், கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தக் கூட்டங்களில் குடிநீர்ப் பிரச்சினை மதுக் கடை பிரச்சினை, பல்வேறு கிராம கோரிக்கைகள் தொடர்பாக விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. கிராம ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றியம் தெம்மூர் ஊராட்சியில் 78 சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது . இதையொட்டி கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் தெம்மூர் ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து செயலர் பூவராகன், திட்ட ஒருங்கிணைப்பாளர் இந்திரா, பணித்தள பொறுப்பாளர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு

இதேபோல கீழ்விசிரி கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் முழு மது விலக்கை அமல்படுத்தக் கோரி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கீழ்விசிரி கிராமம், டாக்டர் ராமதாஸின் தாய் வழி பூர்வீக கிராமமாகும்.
கரூர் வழக்கு.. 2வது சிபிஐ விசாரணை முடிவுக்கு வந்தது.. புன்னகையுடன் வெளியேறிச் சென்ற விஜய்!
2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?
அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!
சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்
{{comments.comment}}