தீவிரவாதத்தை அடியோடு வேரறுப்போம்.. பிரதமர் மோடி, எகிப்து பிரதமர் அறைகூவல்

Jan 26, 2023,10:40 AM IST
டெல்லி: தீவிரவாதத்தை எந்த வகையிலும் பொறுத்துக் கொள்ள முடியாது. அதை அடியோடு வேரறுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசியும் கூறியுள்ளனர்.



இந்தியாவின் 74வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் கலந்து கொண்டுள்ளார். இதையொட்டி நேற்று டெல்லி வந்து சேர்ந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அதன் பின்னர் ஹைதராபாத் ஹவுஸில் பிரதமர் மோடியும், எகிப்து அதிபரும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இரு நாட்டு உறவுகள் குறித்தும், சர்வதேச பிரச்சினை குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவத்ரா கூறுகையில், தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்று பட வேண்டும் என்று இரு நாட்டுத் தலைவர்களம் கேட்டுக் கொண்டனர். தீவிரவாதத்திற்கு எதிராக எந்தவித சகிப்புதன்மையும் காட்டக் கூடாது என்றும் இரு தலைவர்களும் கருத்து தெரிவித்தனர். தீவிரவாத அமைப்புகளுக்கு எந்த நாடும் உதவக் கூடாது என்றும் இரு தலைவர்களும் உறுதிபடத் தெரிவித்தனர்.

தீவிரவாதத்தை  சில நாடுகள் வெளியுறவுக் கொள்கை போல பயன்படுத்துவதையும் இரு நாட்டுத் தலைவர்களும் ஒரே குரலில் கண்டித்தனர் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

கிரீடங்களை விட, அரசியல் சாசனத்தின் மைத்துளி வலிமையானது!

news

பத்ம விருதுகள் ஏன் வழங்கப்படுகின்றன.. யாருக்கெல்லாம் அது கிடைக்கும்..?

news

சகலருக்கும் கிட்டியது வாக்கினும் மாபெரும் பரிசு.. குடியரசு!

news

தாயின் மணிக்கொடி பாரீர்!

news

தஞ்சையில் திமுக மகளிர் அணி மாநாடு: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!

news

அதிரடி சரவெடி... மீண்டும் வேகமெடுத்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!

news

கொண்டாட்டமாம் கொண்டாட்டம்.. குடியரசு தின விழா!

news

சோழர் காலத்தில் செழித்தோங்கிய மக்களாட்சி.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த குடவோலை முறை!

news

சுதந்திர இந்தியா குடியரசு நாடாக மாறிய வரலாறு!

அதிகம் பார்க்கும் செய்திகள்