தீவிரவாதத்தை அடியோடு வேரறுப்போம்.. பிரதமர் மோடி, எகிப்து பிரதமர் அறைகூவல்

Jan 26, 2023,10:40 AM IST
டெல்லி: தீவிரவாதத்தை எந்த வகையிலும் பொறுத்துக் கொள்ள முடியாது. அதை அடியோடு வேரறுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசியும் கூறியுள்ளனர்.



இந்தியாவின் 74வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் கலந்து கொண்டுள்ளார். இதையொட்டி நேற்று டெல்லி வந்து சேர்ந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அதன் பின்னர் ஹைதராபாத் ஹவுஸில் பிரதமர் மோடியும், எகிப்து அதிபரும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இரு நாட்டு உறவுகள் குறித்தும், சர்வதேச பிரச்சினை குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவத்ரா கூறுகையில், தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்று பட வேண்டும் என்று இரு நாட்டுத் தலைவர்களம் கேட்டுக் கொண்டனர். தீவிரவாதத்திற்கு எதிராக எந்தவித சகிப்புதன்மையும் காட்டக் கூடாது என்றும் இரு தலைவர்களும் கருத்து தெரிவித்தனர். தீவிரவாத அமைப்புகளுக்கு எந்த நாடும் உதவக் கூடாது என்றும் இரு தலைவர்களும் உறுதிபடத் தெரிவித்தனர்.

தீவிரவாதத்தை  சில நாடுகள் வெளியுறவுக் கொள்கை போல பயன்படுத்துவதையும் இரு நாட்டுத் தலைவர்களும் ஒரே குரலில் கண்டித்தனர் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்