தீவிரவாதத்தை அடியோடு வேரறுப்போம்.. பிரதமர் மோடி, எகிப்து பிரதமர் அறைகூவல்

Jan 26, 2023,10:40 AM IST
டெல்லி: தீவிரவாதத்தை எந்த வகையிலும் பொறுத்துக் கொள்ள முடியாது. அதை அடியோடு வேரறுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசியும் கூறியுள்ளனர்.



இந்தியாவின் 74வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் கலந்து கொண்டுள்ளார். இதையொட்டி நேற்று டெல்லி வந்து சேர்ந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அதன் பின்னர் ஹைதராபாத் ஹவுஸில் பிரதமர் மோடியும், எகிப்து அதிபரும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இரு நாட்டு உறவுகள் குறித்தும், சர்வதேச பிரச்சினை குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவத்ரா கூறுகையில், தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்று பட வேண்டும் என்று இரு நாட்டுத் தலைவர்களம் கேட்டுக் கொண்டனர். தீவிரவாதத்திற்கு எதிராக எந்தவித சகிப்புதன்மையும் காட்டக் கூடாது என்றும் இரு தலைவர்களும் கருத்து தெரிவித்தனர். தீவிரவாத அமைப்புகளுக்கு எந்த நாடும் உதவக் கூடாது என்றும் இரு தலைவர்களும் உறுதிபடத் தெரிவித்தனர்.

தீவிரவாதத்தை  சில நாடுகள் வெளியுறவுக் கொள்கை போல பயன்படுத்துவதையும் இரு நாட்டுத் தலைவர்களும் ஒரே குரலில் கண்டித்தனர் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்