இந்தியாவின் 15 நகரங்களை தாக்க முயற்சித்த பாகிஸ்தான்.. அதிரடியாக முறியடித்த ராணுவம்!

May 08, 2025,06:36 PM IST
டெல்லி: இந்தியாவின் 15 நகரங்களைக் குறி வைத்து நேற்று நள்ளிரவும் இன்று அதிகாலையும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்தியப் படையினர் அதைத் தாக்கி தகர்த்து முறியடித்து விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் குஜராத் உட்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள 15 நகரங்களில் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்த முயன்றுள்ளது பாகிஸ்தான். ஆனால் அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

ஸ்ரீநகர், பதான்கோட், அமிர்தசரஸ், லூதியானா, ஆதம்பூர், பாரமுல்லா, ரஜோரி, ஜலந்தர், அவந்திப்பூரா, சண்டிகர், ஜம்மு, பதிண்டா, நால், பலோடி, உத்தர்லாய், பூஜ்  நகரங்களை பாகிஸ்தான் குறி வைத்ததாக ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் காஷ்மீர் எல்லையோரப் பகுதிகளில் 16 இந்தியர்கள் உயிரிழந்ததாகவும் கர்னல் சோபியா குரேஷி தெரிவித்தார்.



இந்திய ராணுவ நிலைகளைத் தாக்க பாகிஸ்தான் முயன்றதற்கு பதிலடியாக, லாகூர் உட்பட பல இடங்களில் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளை குறிவைத்து அழித்து இந்தியப் படைகள் பதிலடி கொடுத்தன என்றும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவுித்தனர். பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களின் அதே தீவிரத்துடன் இந்தியப் படைகளின் பதில் நடவடிக்கை இருந்ததாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்த்ரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் படைகள் பயன்படுத்திய ஆளில்லா விமானங்களையும் ஏவுகணைகளையும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயலிழக்கச் செய்தன. நமது நகரங்களை குறிவைத்து வந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த ரஷ்ய தயாரிப்பான எஸ்-400 பாதுகாப்பு அமைப்பை இந்தியா பயன்படுத்தியுள்ளது. 

முன்னதாக இந்திய முப்படைகளும் இணைந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் நான்கு பயங்கரவாத முகாம்களிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) ஐந்து முகாம்களிலும் துல்லியமான தாக்குதல்களை நடத்திய நிலையில் தற்போது பாகிஸ்தான் தரப்பு தாக்குதலை இந்தியப் படைகள் தகர்த்து முறியடித்துள்ள செய்தி வந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அத்தையுடன் தவறான உறவு.. இளைஞரை அடித்து உதைத்த உறவினர்கள்.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்!

news

கல்விதான் ஒருவரின் நிலையான சொத்து... மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!

news

இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு.. ஜூலை 16ல் ஏமனில் மரண தண்டனை?.. கவலையில் குடும்பம்!

news

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்: ஏறிய வேகத்தில் இறங்கியது தங்கம் விலை!

news

அதிகரித்து வரும் காற்று மாசு.. திக்கித் திணறும் தலைநகர் டெல்லி.. கவலையில் மத்திய அரசு!

news

Bharat Bandh: நாடு முழுவதும் 25 கோடித் தொழிலாளர்கள் ஸ்டிரைக்.. முடங்கும் முக்கிய சேவைகள்!

news

காமத் தீயில் வெந்து போனது காமுகனின் மனசு.. கலையின் ஹைக்கூ கவிதைகள்!

news

2 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 09, 2025... இன்று நல்ல நேரம் தேடி வரும் ராசிக்காரர்கள்

news

பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்