இப்பவே தாங்கல... இன்னும் 2 மாதங்களுக்கு வெயில் வச்சு செய்யுமாம்...மக்களே உஷார்

Mar 30, 2024,06:32 PM IST

சென்னை:  இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்குமாம். இது தவிர, நாடு முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் வெப்பம் அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


ஒவ்வொரு வருடமும் கோடை காலம் தொடங்கி விட்டாலே வெயிலின் தாக்கம் வாட்டி வதைக்க ஆரம்பித்து விடும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கியதில் இருந்தே வெயிலின் தாக்கல் அதிகரித்து காணப்படுகிறது. இப்பவே கண்ண கட்டுதே என்பது போல வெயிலின் தாக்கம்  அதிகமாக உள்ளது. இதனால் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதையே தாங்க முடியாமல் மக்கள் திண்டாடி, திணறி வருகின்றனர். இதனால் மக்கள் மதிய வேலைகளில் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலைமை ஏற்பட்டு வருகிறது. இன்னும் ஏப்ரல், மே மாதங்களில் என்ன செய்வது என மக்கள் புலம்பி வருகின்றனர்.




இந்நிலையில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் எனவும், இதற்கிடையே தென் தமிழகப் பகுதிகளில் கோடை மழை  பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.


இந்த நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கத்தால் அனல் இன்னும் அதிகமாக இருக்குமாம். நாடு முழுவதும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமாம். தமிழகம்,கேரளா, கடலோர ஒடிசா மற்றும் கடலோர ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதையும் சந்திக்க தான் வேண்டும் மக்களே.. பி கேர் ஃபுல்!

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்