கல்விக்கு செலவழிப்பதை விட .. 2 மடங்கு அதிகமாக கல்யாணத்துக்கு செலவு பண்ணும் இந்தியர்கள்!

Jun 26, 2024,06:01 PM IST

டெல்லி:   இந்தியர்கள் கல்விக்காக செலவிடுவதை விட திருமண விசேஷங்களுக்கு அதிக அளவில் செலவிடுவதாக புள்ளிவிவரத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.


ஜெப்ரீஸ் என்ற முதலீட்டு வங்கி மற்றும் கேபிடல் மார்க்கெட்  நிறுவனம் இதுதொடர்பாக ஒரு ஆய்வை நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது. அதைப் பார்க்கும்போது பல சுவாரஸ்யமான தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன.


கல்விக்காக இந்தியர்கள் செலவிடுவதை விட கல்யாணத்திற்காக 2 மடங்கு அதிகம் செலவழிக்கிறார்களாம். கல்யாணத்தைப் பொறுத்தவரை சாப்பாட்டுக்குதான் அதிக அளவில் செலவு செய்யப்படுகிறதாம். இந்திய கல்யாணச் சந்தையின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 10.7 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது அமெரிக்க கல்யாணச் சந்தையை விட 2 மடங்கு அதிகமாகும்.




ஒரு இந்தியத் திருமணத்தின் சராசரி செலவு 12.5 லட்சமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது கல்யாணம் என்று வந்து விட்டால் குறைந்தது 12.5 லட்சம் ரூபாய் அளவுக்கு செலவாகிறதாம். இது ஒருவர் தொடக்கப் பள்ளி முதல் பட்டப் படிப்பு வரை படிக்கும் செலவை விட 2 மடங்கு அதிகமாகும்.


அதேசமயம், இந்தியர்களை விட சீனர்கள்தான் கல்யாணத்திற்காக அதிகம் செலவழிக்கிறார்களாம். இந்தியர்களைப் பொறுத்தவரை அதிக அளவில் கல்யாணங்கள் நடைபெறுகின்றன. சீனர்களைப் பொறுத்தவரை கல்யாணங்கள் குறைவு, ஆனால் செலவு அதிகம்.


இந்தியர்களைப் பொறுத்தவரை தனி நபர் வருமானத்தை விட 5 மடங்கு அதிகமாக கல்யாணத்திற்காக செலவு செய்கிறார்களாம். 


இந்தியாவில் சொகுசு கல்யாணங்கள் அதிகரித்து வருகின்றனவாம். அதாவது ஆடம்பரத் திருமணங்கள். இதுபோன்ற திருமணங்களில் சராசரியாக 20 முதல் 30 லட்சம் வரை செலவிடுகிறார்கள். பெரும் பணக்காரர்களின் திருமணங்களில் இதை விட அதிகமாக செலவு செய்கிறார்களாம்.




திருமணங்களின்போது பெரும்பாலும் ஹோட்டல்களில் அறைகள் எடுப்பது, நல்ல சாப்பாடு, அலங்காரங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நகைகள், உடைகள், ரயில் அல்லது விமான போக்குவரத்து செலவு ஆகியவை அடக்கம்.  முன்பு போல இல்லாமல் இப்போது திருமண விழாக்கள் என்பது ஒரு தொழிலாக மாறியிருக்கிறது. அதாவது திருமணங்களை நடத்தித் தர பல்வேறு நிறுவனங்கள் வந்து விட்டன. ஏஜென்சிகள் இருக்கின்றன. ஒரு திருமணத்திற்குத் தேவையான அனைத்து பணிகளையும் இவர்கள் நடத்தித் தருகிறார்கள். கிட்டத்தட்ட ஈவன்ட் மேனேஜ்மென்ட் போல இவை மாறி விட்டன.


திருமணங்களின்போது நகை வாங்குவது என்பது கிட்டத்தட்ட மணப்பெண் சார்ந்ததாகவே அதிகம் இருக்கிறது. அதாவது வாங்கப்படும் நகையில் பாதிக்கும் மேலானவை மணப்பெண்களுக்காக வாங்கப்படுகின்றன. திருமணச் செலவில் 10 சதவீதம் ஆடைகளுக்கும், 20 சதவீதம் உணவுக்கும், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு 15 சதவீதமும் செலவிடப்படுகிறது.


கல்யாணம் செஞ்சு பார்.. வீட்டைக் கட்டிப் பார் என்ற பழமொழி சும்மா சொல்லப்படவில்லை.. உண்மையிலையே இவை இரண்டும் இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரும் சவால்களாக மாறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் அதிகரித்து வரும் இரவு நேர வெப்ப நிலை.. இதுதான் காரணம்.. விழிப்புணர்வு தேவை

news

விஜய் 51.. தவெக தொண்டர்கள், ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து

news

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு.. 3வது உலகப் போர் வெடிக்குமா?

news

Hot air balloon fire: பிரேசில் துயரம்.. ஹாட் ஏர் பலூன் தீப்பிடித்து எரிந்து விழுந்தது.. 8 பேர் பலி

news

போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை

news

வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்

news

இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?

news

ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

news

17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்